Posts

Showing posts from November, 2012

ஸலாமை -- சமாதானத்தை பரப்புங்கள்!

Image
ஹளரத் அப்துல்லாஹ் பின் ஸலாம் (யூத மத அறிஞராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.இவர் இஸ்லாமை ஏற்பதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்தபொழுது அவர்களைக்காண நான் வந்தேன். திரு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த போது அந்த முகம் பொய் முகமன்று என விளங்கிக்கொண்டேன். அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு, '' மக்களே! ஸலாமை பரப்புங்கள்.உணவளியுங்கள். உறவினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து  தொழுங்கள்.(ஒரு பாதிப்பும் இல்லாமல்) ஸலாமத்தான முறையில் (பத்திரமாக) சொர்க்கம் பிரவேசிப்பீர்கள் '' (திர்மிதி ; 2485 இப்னுமாஜா ; 3251) அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து புனித மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்குள்ள மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று,ஏற்புரை நிகழ்த்திய போது தான் மேற்கண்டவாறு பேசினார்கள்.இது நபி (ஸல்) அவர்களின் கண்ணிப்பேச்சு, திரு மதினாவுக்கு

ஹிஜ்ரி சகாப்தம் 1434 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Image
'' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 47913  முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. தாரிகுத்தபரி 312) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய  அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் வரலாறு

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன் !! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!! ரப்பனா ஆத்தினா ஸஆதத் தாரைன்.  அன்புடையீர்! அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) இப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரஸாவை பற்றி இங்கு அறிமுகப்படுத்துகின்றோம் .அல்ஹம்துலில்லாஹ். மதரஸா  ஜாமிஆ மன்பவுல் அன்வார்:   தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம் லால்பேட்டையில் அமைந்துள்ளது. மதரஸா ஜாமிஆ மன்பவுல் அன்வார். இது தமிழ்நாட்டில் வேலூர் மதரஸா அல் பாக்கித்துஸ் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மதரஸாவாகும். இம் மதரஸா  1862ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரஸாவில் ஒவ்வொரு வருடமும் இருநூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம் தோறும் 50மேற்பட்டோர் ஃபாஜில், மௌலவி மற்றும் ஹாபிழ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.   பட்ட

M.I.S. CERTIFICATE COURSE மர்கஸுல் அல் இஸ்லாஹ் வழங்கும் ஒரு வருட ( Master in Islamic Studies) படிப்பு

Image
உலமாக்கள் தங்கள் தகுதிகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள அறிய வாய்ப்பு! இமாம்களுக்கு கிறாஅத் -- பயான்களில் சிறப்புப்பயிற்சிகள் மிக குறுகிய காலத்தில் குர்ஆன், தீனிய்யாத்தைகற்ப்பிக்கும் வழிகாட்டல் மற்றும் ஜமாஅத்தார்களுக்கு ஆற்றிட வேண்டிய மார்க்க தொடர்பிலான அனைத்து சேவைகளுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டல் பயிற்றுவிப்புகள். கம்யூட்டரை இயக்கிட  தேவையான பயிற்சிகளும்,கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தப்ஸீர், ஹதீஸ்,ஃபிக்ஹ்,தஸவ்வுஃ,தாரீக் ஆகியவற்றிலிருந்து தீன் கித்மத்திற்கு அவசியமானவற்றை புதிய பாணியில் பயிற்றுவித்து சிறந்த முறையில் மார்க்க சேவைகளை ஆற்றிடும் வழிகாட்டல்கள். மூத்த உலமாக்கள்,இஸ்லாமிய (Professors) பேராசிரியர்கள்,ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூலம் நுணுக்கமான மார்க்க தகவல்கள், வாழ்வியல் வழிகாட்டல்களை அறிந்துகொள்ள விசேஷ வகுப்புகள். சிறுபான்மையோருக்கான அரசாங்க ஒதுக்கீட்டிலிருந்து வசதியற்ற  வயோதிகர்கள் -- விதவைகள் -- கல்வி -- திருமணம் ஆகியவற்றுக்கான உதவிகளை பெற்றுத்தரும் வழிமுறை பற்றிய வழிகாட்டல்கள். கம்யூட்டர் தொழில் சார்ந்த பயிற்றுவிப்புகள் மூலம் Typewriting, Microsoft -- D

புனித ஷெய்கு மார்களின் முக்கியமான நினைவு தினங்கள் (மறைவு நாட்கள்)

Image
1. முஹர்ரம் பிறை 9,10 -- தாஸூஆ ஆஸூரா நோன்பு தினங்கள் பிறை 10 -- ஆஸூரா தினம் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள்  ஷஹீதான தினம். 2. ஸஃபர் பிறை 5 -- ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) பிறை 13 -- ஷைகு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் (ரலி) பிறை 14 -- ஷைகு (காயல்பட்டினம்) தைக்கா ஸாஹிப் காஹிரீ (ரலி) கடைசி புதன் (ஒடுக்கத்துப் புதன்) 3. ரபீஉல் அவ்வல் பிறை 12 -- ஈருலக இரட்சகர் நாயகம் ரஸூல் (ஸல்)  அவர்களின் ஜனன தினம். 4. ரபீஉல் ஆகிர் பிறை 11, (பிறை 18) -- ஃகவ்துல் அஃலம் முஹ்யித்தீன்  அப்துல் காதிர் ஜீலானி (ரலி) பிறை 26 -- பல்லாக்கு வலியுல்லாஹ் (ரலி) 5. ஜமாதுல் அவ்வல் பிறை 2 -- பெரிய ஷைகு நாயகம் அவர்களின் மனைவியார்  மர்யம் ஆயிஷா (ரலி) பிறை 10 -- முத்துப்பேட்டை ஷைகு தாவூது வலீ (ரலி) 6. ஜமாதுல் ஆகிர் பிறை 10 -- நாகூர் ஷாஹுல் ஹமீது  பாதுஷா நாயகம் (ரலி) பிறை 14 -- இமாம் கஸ்ஸாலி (ரலி) 7. ரஜப் பிறை 5 -- இமாமுல் அரூஸ் மாப்பிள

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு