லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் ஈன்றெடுத்த கல்விக் கடலின் மறைவு
From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > Date: 1/2/2012 நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான மிகப்பெரும் சேவையாற்றியவரும், பன்னூல் ஆசிரியரும்,திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின் தலைமை இமாமும், தமிழகத்தின் மிகப்பெரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞரும், மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா அல்ஹாஜ் K.A.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சிந்திக்க வைக்கும் சொற்ப்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச்செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகிவுள்ளது.அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் ஜாமிஆ மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை தலைமை இடமாகக் கொண்டு 1996 முதல் செயல்படும் ஹைஅத்து ஷரீயா என்ற ஷரீஅத் பே