முஹர்ரம் 25 முதல் ஸஃபர் 25 வரை நடை பெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்
கடைய நல்லூரில் சிராஜும் முனீர் அரபுக் கல்லூரியில் ஜனவரி 1 ஆம் தேதி ஐம்பெரும் விழா, சென்னை வண்டலூர் புஹாரி ஆலிம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி பி.எஸ்.மஸுது ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.இதில் அய்யம் பேட்டை பி.எம்.ஜியாவுத்தீன் ஹஜ்ரத், நெல்லை மாவட்ட மேற்க்குப் பகுதி அரசு டவுன் காஜி எ.ஒய். முஹ்யித்தீன் பைஜி ஃபாஜில் ரஷாதி ஹஜ்ரத், தென்காசி ரப்பானியா அரபுக்கல்லூரி முதல்வர்,ஸம்சுத்தீன் ஹஜ்ரத்,ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சார்பில்,ஜனவரி 3 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் தலைமை இமாம் கல்விக் கடல் மௌலானா மௌலவி கே.எ. நிஜாமுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் நினைவு ஜியாரத் (மூன்றாம் நாள் பாத்திஹா) நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளரும்,சென்னைப் பல் கலை கழகத்தின் அரபித்துறைப் பேராசிரியர் டாக்டர், மௌலானா மௌலவி வி,எஸ், அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சென்னை பெரியமேடு மஸ்ஜிதின் , முன்னால் தலைமை இமாமும் தமிழகத்தின் தலைசிறந்த காரீயுமான