Posts

ஜமாஅத்துல் அவ்வல் பிறை 3-முதல் ஜமாஅத்துல் அவ்வல் பிறை 25-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

சென்னை வியாசர்பாடி,7-வது தெரு S.A.காலனியில் புதுப்பிக்கப்பட்ட ஷுபுஹானியா மஸ்ஜிது, மற்றும் மதரஸா திறப்புவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்றது.விழாவில், மௌலானா A.K.சிப்கதுல்லாஹ் ஆலிம் பாகவிM.A.Mphil  அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தாய்ச்சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம். காதிர் முஹைதீன் அவர்கள் பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள். ஜமாலியா  அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி M.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத், மஸ்ஜித் மஃமூர் தலைமை இமாம்,மௌலானா O.S.M. இல்யாஸ் ஆலிம் காஸிமி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் மௌலானா A.M.M.இப்றாஹிம் ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள். மீலாது நபி (ஸல்)விழா, முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா,சுன்னத் ஜமாஅத் பேரியக்க கிளை துவக்கவிழா,ஆகிய முப்பெரும் விழா, சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் சார்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி,சென்னை தண்டையார்பேட்டை,நேதாஜிநகர்,3-வது தெருவில் உள்ள கீழக்கரை கல்வத்து நாயகம் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மௌலானா மௌலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் மஹ்ழரி அவர்கள்,கிராஅத் ஓதினார்கள்.மௌலானா ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆமிர

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு