Posts

Showing posts from September, 2013

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!

Image
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் சென்று மார்க்க கல்வி பயின்றார்கள். பின்னர் வேலூர் மதரஸா  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில் '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன்  ஒரு கல்விக்கூடத்தை  நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர். '' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் தி

இஸ்லாமிய மார்க்க உண்மையான விளக்கம் !!!

Image
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இடம் ;- முகமதியர் தெரு ( கோரிப்பாளையம் ) தேதி ;- 15.09,2013 ( ஞாயிற்றுக்கிழமை ) நேரம் ;-- மாலை 5.30 மணிமுதல் 9.30 மணி வரை கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் நாளை 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை சரியாக 5.30 மணிமுதல் 9.30 மணி வரை,சுன்னத் வல் ஜமாஅத் மதுரை மாவட்ட கோரிப்பாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சியும்,ஷரீஅத் கேள்வி -- பதில் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால், இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம் தங்கள் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான சிறப்பான பதிலை தருவதற்கு சிறப்பு அழைப்பாளர் ; மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள் ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) தலைமை ;- மௌலானா, அல்ஹாஜ்,மின்னல்  முஸ்தபா நூரி ஹஜ்ரத் அவர்கள்.           ( மாநில துணைச் செயலாளர்,ஐக்கிய சமாதானப்பேரவை ) கிராஅ

லால்பேட்டை ஜாமிஆவில் மாணவ சொற்பயிற்சி மன்றத் தொடக்க விழா, மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்களுக்குபாராட்டுவிழா !!!

Image
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் அஞ்சுமன் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத் தொடக்க விழா மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜியாக தேர்ந் தெடுக்கப்பட்ட ஜாமிஆவின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களுக்கு பாராட்டு விழாவும், ஜாமிஆ மன்பவுல் அன்வார் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் 5 ஆம் தேதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மௌலவி அபுல் பயான்,ஷைகுல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்கள். ஜாமிஆ பேராசிரியர்கள்  மௌலானா மௌலவி முஃப்தீ  அப்துர் ரப் ஹஜ்ரத், மௌலானா மௌலவி  அப்துல் அலி ஹஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முஹம்மது ஆசிக் கிராஅத் ஓதினார், ரியாஜூல்லா கீதம் வாசித்தார், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர்    மௌலானா மௌலவி  ஸலாஹூத்தீன் வரவேற்புரை ஆற்றினார். சென்னை அடையார் ஜூம்ஆ மஸ்ஜித் தலைமை இமாம்  மௌலானா மௌலவி  சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத்  வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்  மௌலானா மௌலவி  முஹம்மது அஹ்மது ஹஜ்ரத், ஜாமிஆ பேராசிரியர்  மௌலானா மௌலவி  சைபுல்லாஹ் ஹஜ்ரத், ஆயங்குடி  மௌலானா மௌலவி  ஜாபர் அலி ஹஜ்ரத்   ஆகியோ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு