Posts

Showing posts from May, 2017

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு  வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.* புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் நோன்பாளிகள்  தராவீஹ் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் :* *முதலாம் தராவீஹ் தொழுதவர்...* *அன்று பிறந்தப் பாலகனைப் போல் ஆகிவிடுகிறார்.* *2 ம் நாள் தொழுதவருக்கு...* *அவரின் பெற்றோரின் பாவமும், அவரின்  பாவமும் மன்னிக்கப் படுகின்றன.* *3 ம் நாள் தொழுதவருக்கு...* *அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ  மன்னிப்புக் கேட்கிறார்கள்.* *4 ம் நாள் தொழுதவருக்கு...* *தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், குர்ஆன் ஓதிய  நன்மைகள் வழங்கப்படுகின்றன.* *5 ம் நாள் தொழுதவருக்கு...* *புனித கஃபாவிலும், மஸ்ஜித் நவபி, மஸ்ஜிதுல்  அக்ஸாவிலும்,தொழுத நன்மைகள் கிடைக்கும்.* *6 ம் நாள் தொழுதவருக்கு...* *பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும்,  அவருக்காக அனைத்து வஸ்துகளும்  பிழை பொறுக்கத் தேடுகின்றன.* *7 ம் நாள் தொழுதவருக்கு...* *ஹள்ரத் நபி மூஸா* *(அலைஹிஸ்ஸலாம்)  அவர்களின் சிறப்பு வழங்கப்படுகிறது.* *8 ம் நாள் தொழுதவருக்கு...*  *ஹள்ரத் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்

சுவர்க்க லோக தலைவி அன்னை பாத்திமா நாயகியாரின் ஒரு நாள் பொழுது....!

Image
ஊரெங்கும் நாளை வர இருக்கும் பெருநாளுக்காக சந்தூஷமும், குதூகலமும் கொப்பளிக்க மக்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இருலோக இரட்சகரான முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அருந்தவப்புதல்வி சுவர்கலோக தலைவி பாத்திமா நாயகி திருக்குர்ஆன் வசனங்களை ஓதியவர்களாக எளிய ஒட்டுப்போட்ட ஆடையில் திரிகையில் கோதுமை அரைத்தவகர்கலாக உள்ளார்கள். இந்த கோதுமையும் எப்படி வந்தது என்றால்... வெளிய சென்று வீடுதிரும்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாத்திமா உண்பதற்கு ஏதும் உணவு இருக்கின்றதா? என வினவ இருவேளை பட்டினிதான், குழந்தைகளும் பட்டினியோடு தான் விளையாண்டு கொண்டுள்ளனர். கோதுமையோ, மாவோ எதுவும் இல்லை என பாத்திமா நாயகியார் பணிவுடன் பதிலளிகிரார்கள். உடனே வெளியே கிளம்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதாவது வேலை கிடைக்குமா என்று தேடி அலைகின்றார்கள். முடிவில் ஒரு யூதன் தன ஒட்டகத்திலிருந்து ஏராளமான மூட்டைகளை இறக்குவதற்கு யோசனையில் இருக்கையில் அய்யா ! ஏதும் வேலை இருக்கின்றதா ? என்று குரல் கேட்டு திரும்பிய யூதன் ஆம் அந்த பொதி மூட்டைகளை இறக்கி உள்ளே அடுக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் பசியையும் பொருட்படுத்த

அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா நினைவு தினம் !!!

Image
ரமலான் பிறை 3  அன்னை பாத்திமா ரலியல்லாஹு  அன்ஹா அவர்களின் நினைவு தினமாகும்.அல் பாத்திஹா சுவர்க்கலோக தலைவி  அன்னை பாத்திமா ரலியல்லாஹு  அன்ஹா அவர்களின்   புனித ஆடை நன்றி ;- Mailof Islam.

அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா !!!

Image
எனது ஈரக் கொழுந்து என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டவரும் அன்னவர்களின் இளைய புதல்வியுமான பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்று வாழ்ந்த வாழ்க்கையை இன்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் சகோதரிகளே! மனம் உருகுது அல்லவா! ​​நுபுவ்வத் 10 – ஆம் ஆண்டு அன்னை கதீஜாவை இழந்தார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது தனது மகளை, ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மணம் முடித்து வைத்தார்கள். அப்போது பாத்திமா நாயகியார் அவர்களுக்கு வயது பதினெட்டு. ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இருபத்தி மூன்று வயதாகும். மிகவும் ​எளிமையான முறையில் ஹிஜ்ரி – 2 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது மகளுக்கு மரக் கட்டில், தலையணை, போர்வை, திரிகை, நீர் சேகரிப்பதற்கான பாத்திரம் போன்ற பொருட்களை அன்பளிப்புச் செய்தார்கள். பாத்திமா நாயகியார் அவர்கள் தனது வேலைகளை, அதாவது மாவு அரைத்தல், ரொட்டி சுடுதல், நீர் அள்ளுதல்

பெருநாள் அன்று பேன வேண்டியவை !!!

Image
1.அதிகாலையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது. 2.மிஸ்வாக் செய்து வாயைச் சுத்தப் படுத்துதல். 3.ஈது தொழுகைக்காக குளிக்கிறேன் என்ற  நிய்யத்துடன் குளித்தல். 4.உணவு உண்டுவிட்டுத் தொழுகைக்கு வருதல். 5.ஆகுமான நல்ல ஆடைகளை அணிதல். 6.நறுமணம் பூசுதல்,சுருமா இடுதல். 7.பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றுதல், 8.சந்தோசத்துடன் இருத்தல்,சந்தோசத்தை வெளிப்படுத்துதல், 9.முஸாபஹா,முஆனகா செய்து வாழ்த்துக்களைப்  பறிமாறிக்கொள்ளுதல். 10.தர்மங்கள் அதிகமாக செய்தல். 11.உறவுகளைச் சந்தித்து அன்பை பறிமாறுதல். 12.அனாதைகள்,ஏழைகள்,நோயாளிகளுக்கு உதவிகள் புரிதல். 13.அல்லாஹ்வின் அன்பும்,நட்பும், நெருக்கமும் தரும்  காரியங்களை எப்பொழுதும் செய்தல். 14.பெருநாள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் போவதற்கும்  வருவதற்கும் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள்.  ஆதாரம் ; புகாரி. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

சஹ்ருக்கு நேரமாச்சு எழுந்திரு சகோதரி !!!

Image
இஸ்லாமிய பாடகர் அல்ஹாஜ் தாஜுத்தீன் ஃபைஜி அவர்களும்,மூன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜனாப் ஆஸிப் அஹ்மது குரைஷி ஆகியோர், புனித ரமழான் மாதத்தின் சஹ்ர் நேரத்தின் சிறப்பை பற்றி பாடிய சிறப்பான பாடல்.இது மூன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அரபுலகத்தின் பிரபல இஸ்லாமிய பாடகர் மாஹிர் ஜைன் அவர்கள் புனித ரமலானைப் பற்றி பாடிய அழகான பாடல்

Image
Maher Zain (Arabic: ماهر زين‎ ; born 16 July 1981[1] in Tripoli, Lebanon) is a Muslim Swedish R&B singer, songwriter and music producer of Lebanese origin. He released his debut album Thank You Allah, an internationally successful album with strong Muslim religious influences, in 2009. He released his follow-up album Forgive Me on 2 April 2012.

புனிதம் நிறைந்த ரமழான் மாதத்தின் சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image
(1 ) ரமலான் புனித ரமலான். வீடியோ (2 ) ரமலான் புனித ரமலான்.ஆடியோ ( 3 ) ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting

Image
நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள். 01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள். 02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும். 03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும். 04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும். 05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள். ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும். களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்த

ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)

Image
ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும். ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும். பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும். ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது. தொழுகை முறை: ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு. முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓ

லைலத்துல் கத்ர் இரவு அமல்கள் !!!

Image
அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும்  S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம்  ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் (முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை ) வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்!!!

Image
அருள்   நிறை   லைலத்துல்   கத்ர்   இரவில் அனைவரும்   ஆற்ற   வேண்டிய   அமல்கள் லைலத்துல்   கத்ர்   இரவு   வணக்கம்   பற்றி!!! அண்ணலார்  ( ஸல் )  அவர்கள்   யார்   நன்னம்பிக்கையுடனும் , தூய   நிய்யத்துடனும் , ' ' லைலத்துல்   கத்ர் ''  எனும்   இரவில் விழித்திருந்து   இறை   வணக்கத்திலே   கழிக்கிறாரோ  அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத்   4;  அல்ஹம்து  1  முறை ,  அல்ஹாக்கு முத்தகாதுரு  1  முறை ,  குல்ஹுவல்லாஹு  3  முறை ஓதி   தொழ   வேண்டும் இதன்   பலன் ;  மரண   வேதனை   இலேசாக்கப்படும் , மண்ணரை   வேதனை   குறைக்கப்படும் . (2)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 1  முறை   குல்ஹுவல்லாஹு  27  முறை   ஓதி   தொழ   வேண்டும்   இதன்   பலன்   அன்று   பிறந்த   பாலகனைப்   போன்று   பாவ   மற்றவராகிறார் (3)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 3  முறை   குல்ஹுவல்லாஹு  50  முறை   ஓதி   தொழ   வேண்டும் . இத்   தொழுகை   முடிந்தவுடன்   ஸஜ்தாவில்  3- ம்   கலிமா   ஒரு   முறை   ஓதிய   பின

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர்.

Image
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. பத்ர் தளம் சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு