Posts

Showing posts from September, 2014

மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன?

Image
மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில்  27 -09 -2014 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு திருக்குர்ஆன் விரிவுரை  நடைபெற்றது. அது சமயம் மௌலானா மௌலவி முஹம்மது ஹஸ்ஸான் புகாரி ஹஜ்ரத் அவர்கள் .மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன?  என்ற தலைப்பில் சிறப்புபேருரையாற்றினார்கள். முதல் பாகம். இரண்டாம் பாகம்.

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம் சிறப்பாக நடந்து முடிந்தது

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து ''  என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை  பெரிய ஆலிம் ஷாஹிப்  அவர்களின்  47 வது நினைவு தினம். மிகச்சிறப்பாக  நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை  சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,நடைபெற்றது.அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப்பின், பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு  குர்ஆன் ஷரீஃப் ஓதப் பட்டு, கண்ணியமிகு உலமாப் பெருமக்களால், ஷாதலியா  தரீக்காவின் திக்ரு மஜ்லிஸும் நடத்தப்பட்டது. பின்பு சித்தார் கோட்டை,தெக்குவாடி,முன்னால் மதரஸா  மதீனத்துல் உலூம் முதல்வர், ஆலிம் கவிஞர். மௌலானா மௌலவி அல்ஹாஜ்  A.ஹாஜா முஹ்யித்தீன் காதிரி ஆலிம் B.A.ஹஜ்ரத்  அவர்கள்  சிறப்பு பயான்  செய்து, இறுதியில்  சிறப்பு துஆச் செய்தார்கள். நிகச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேச உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை

சமூக வலைத் தளங்கள் ஓர் ஷரீஅத் பார்வை !!!

Image
என்றும் தங்களன்புள்ள  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா எம்.சதீதுத்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்.M.A.,M.phil.( P.hd  வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

அசத்தியம் என்றும் வெல்லாது !!!

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் மஜ்லிஸ் மென்மேலும் சிறக்க,  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் தர்ஹா ஷரீஃபில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் புனித புர்தா ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் மஜ்லிஸ் மென்மேலும் சிறக்க,  சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மப்ரூரான ஹஜ்ஜு !!!!

Image
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ ஹஜ்ஜு அதற்கென குறிப்பிட்ட மாதங்கள் தான். [2 ; 197] இது ஹஜ்ஜுடைய காலம்.அதாவது ஷவ்வால்,துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகும்.இதற்கு முன்னர் அல்லது இதற்கு பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட முடியாது.கட்டினாலும் செல்லாது. [ஹனஃபி மத்ஹபில் செல்லும். ஆனால் மக்ரூஹ்] ஆனால் உம்ராவுக்கு கால நேரம் குறிப்பில்லை. எப்போதும் அதற்கு இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.                                                      இப்போது உலகெங்கிலும் நாலா பாகங்களிலிருந்தும் எட்டு திக்கு களிலிருந்தும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்.இந்த ஹஜ்ஜின் மாண்பை, சிறப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ மப்ரூரான ஹஜ்ஜு,அதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை.உம்ரா to உம்ரா அவ்

ஹஜ்ஜு அவசரம் !!!

Image
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ எவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ்வுக்காக [அங்கு சென்று] அந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்] நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 ; 97] ஹஜ்ஜு என்பது வசதியான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜுக் கடமை மிக முக்கிய மானதொரு கடமை.அது இறுதிக் கடமையல்ல. நிறைவைத்தரும் ஓர் கண்ணியமான கடமை.இறுதிக் கடமை ஹஜ்ஜு என்று சொல்லிச் சொல்லி வாழ்வின் கடைசி காலத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தப்பான ஒரு சிந்தனை எப்படியோ நமது மூளையில் புகுந்து ஹஜ்ஜை முதுமைப் பருவத்திற்குத் தள்ளி விட்டது. ஹஜ்ஜு முதுமைக் கடமையல்ல.முழுமையான கடமை, முழுமையாக்கும் கடமை.ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வரும் ஹாஜி,அன்று பிறந்த பாலகனாக பாவமற்ற அப்பாவி முஸ்லிமாக மாறி வ

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம்.

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின்,சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில், பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதி, கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் திக்ரு மற்றும் சிறப்பு பயான் நடைபெற இருக்கிறது. இறுதியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு துஆச் செய்ய இருக்கிறார்கள். பெண்களுக்கு சின்னப் பள்ளிவாசல் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா திருமண மண்டபத்தில்  இடம் வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம். அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில்  அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி ) வெளியீடு - மன்பயீ ஆலிம்

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!

Image
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில்  கி.பி.1882 ல் பிறந்தார்கள். தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம்  சென்று மார்க்க கல்வி பயின்றார்கள். பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்  '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன்  ஒரு கல்விக்கூடத்தை  நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர். '' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''

'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் வரலாறு

Image
வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு !!!

Image
selayang  மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் 20 -09 -2014 சனிக்கிழமை  திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு.  தலைப்பு ;- புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு   திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ். முஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள். முதல் பாகம். இரண்டாம் பாகம்.

சிராஜுல் ஹுதா தஃப்ஸீர் துவக்க விழா !!!

Image
14-09 2014 ஞாயிறு மாலை அன்று தாமன் பத்துகேவ்ஸ், சிராஜுல் ஹுதா மதரஸாவில் தஃப்ஸீர் வகுப்பின் துவக்க விழா  (திருக்குர்ஆன் விரிவுரை துவக்கம் )  அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா மௌ லவி அல்ஹாஃபிழ்,அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களால்  திருக்குர்ஆன் விரிவுரை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. . 

புனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு !!!

Image
மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில், ( 13-09-2014 ) அன்று மஃரிபுத்  தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர்  ( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு,  அது சமயம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது ஷாஃபீ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நடத்தினார்கள்.

யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு !!!

Image
12-09-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு !!!  குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

ஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக மற்றும் கேரளவைச் சார்ந்த பாடகர்கள் பாடிய அழகிய பாடல்கள் !!!!!

Image
ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி  அபுல் பரக்கத் அவர்கள் பாடிய பாடல்கள். ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய கேரளச் சிறுமியின் அழகிய பாடல் ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய கேரளச் சிறுவனின் அழகிய பாடல் ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய அழகிய மலையாளப் பாடல் ஏர்வாடி ஷஹீது  சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய ஏர்வாடி ராஜா மாப்பிள்ளை பாடல் வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.

Image
வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்யித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image
வெளியீடு-  மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

புனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு !!!

Image
முதல் பாகம். இரண்டாம் பாகம். மூன்றாம் பாகம். நான்காம் பாகம்.

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- இரண்டாம் பாகம்.

Image
யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்: அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின்  பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள். இராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள். மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாய

ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்

Image
12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்.. கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் .. அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான். நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழ

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.

Image
ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள். அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பி

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு