Posts

Showing posts with the label சித்தார் கோட்டை மீலாது ஊர்வலம்

சித்தார் கோட்டையில் பெருமானாரின் 1489 வது மீலாது ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!!

Image
முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம், அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின், பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (03-01-2015) அன்று சனிக்கிழமை  மீலாது விழா கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை காலை 10-00 மணிக்கு, சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில், சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப், சித்தார் கோட்டையின் மூன்று இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு,  இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.  பிறகு ஊர் மக்கள் அனைவருக்கும் விசேச  உணவு வாகனங்கள்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு