Posts

Showing posts from July, 2016

சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் !!!

Image
சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலின்  சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!! ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள்  இது ஒரு ஷாபி பள்ளிவாசல்...... இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்????? ஒரே ஒரு ஹதீஸ் வசனம்தான்!!!!! ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள். இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை.... இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று......... உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார்கள்.  அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப். மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்ற

இராமநாதபுரத்தை கலக்கும் இஸ்லாமிய மருத்துவர்கள் குடும்பம் !!!

Image
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மர்ஹூம் அப்துல்லாஹ் இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை. மறைந்த டாக்டர்  மர்ஹூம் அப்துல்லாஹ்வுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள். மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் மர்ஹூமா செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல

தூக்கம் !!!

Image
"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் : * பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது  வறுமையை உண்டாக்கும். * லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில்  சோம்பலை  ஏற்படுத்தும். * சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில்  தூங்குவது  அறிவாற்றலை அதிகப்படுத்தும். * சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம்  சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும்  தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும். * பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது  அழிவை , நாசத்தை ஏற்படுத்தும். மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில்  கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது  அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும். அதிகமான தூக்கம் கீழ் காணும்  விளைவுகளை ஏற்படுத்தும் , * மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும், * சளியை அதிகப்படுத்தும், * உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்., * வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், * பார்வையை பலகீனப்படுத்தும்.. இன்னும் இது போன்ற பல நோய்களை ஏற்ப

இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையானில் அரசாட்சி புரியும் மஹான் சீனி அப்பா ஷஹீது வலியுல்லாஹ் !!!

Image
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளிக்கு அருகிலுள்ள,  சுந்தரமுடையான் என்ற அழகிய  கிராமத்திலுள்ள, அந்தக் கடற்கரையில் அலைகள் இல்லை. அமைதி கொஞ்சும் ஏரி போல் நீலக்கடல் விரிந்து கிடக்கிறது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பல மரங்கள் நிழல் விரித்திருக்கின்றன. மன அமைதியை நாடி மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கலாம். இங்குதான் அமைந்திருக்கிறது சீனி அப்பா தர்கா. ராமநாதபுரம் மாவட்ட இறைநேசர்களின் உறைவிடங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. இது. மண்டபத்திற்கு மேற்கே சுமார் பத்து மைல் தூரத்தில் தர்கா அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து சில கிலோமீட்டர்கள் மண் சாலையைக் கடந்து வரவேண்டும். வந்து சேர்வதற்கு சிலருக்குக் களைப்பாகவும் தோன்றலாம். ஆனால்,தர்காவுக்கு வந்த பிறகு நிழலும் கடல் காற்றும் தரும் சுகத்தில் அலுப்பும் களைப்பும் அகன்றுவிடும். இந்த இடத்திற்குப் பெயர் மரைக்காயர்பட்டினம். பிரபலமான பாம்பன் கடல் பாலமும் அருகிலுள்ள மண்டபம் பகுதியில்தான் அமைந்துள்ளது. ஹழரத் யாசீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு என்று சிறப்பிக்கப்படும் சீனி அப்பா, ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள் !!!

Image
யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள். அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள். ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள். மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா,

இறை நேசர்களின் பிறப்பிடங்கள் !!!

Image
கவ்துல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி (ரழி) - ஜீலான் , ஈரான் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதிலி (ரழி) - சியுட்டா - மொராக்கோ கரீப் நவாஸ் அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரழி)  - சிஸ்தான் - கிழக்கு ஈரான் ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் ரிபாய் (ரழி) - பஸ்ரா - ஈராக் ஷெய்க் பஹாவுத்தீன் நக் ஷபந்த் புஹாரி(ரழி) - கஸ்ரி ஆரிஃபீன் - உஸ்பெகிஸ்தான் ஷெய்க் ஷிஹாபுத்தின் யஹ்யா இப்னு ஹபஷ் அஷ்ஷுஹரவர்த்தி (ரழி) - சொஹர்வர்த் (ஜன்ஜான் மாகாணம்) - ஈரான் இமாம் புஹாரி(ரஹ்) - புஹாரா - உஸ்பெகிஸ்தான் - மத்திய ஆசியா இமாம் முஸ்லிம்(ரஹ்) - நிஷாப்பூர், ஈரான் இமாம் அபு தாவூத்(ரஹ்) - ஸிஸ்தான், கிழக்கு ஈரான் இமாம் திர்மிதி(ரஹ்) - உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியா இமாம் இப்னு மாஜா(ரஹ்) - கஸ்வின், ஈரான் இமாம் அபுஹனிஃபா(ரஹ்) - குஃபா, ஈராக் இமாம் ஷாஃபிஈ(ரஹ்) - காஸா, பாலஸ்தீன் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) - பாக்தாத் ஈராக் இமாம் மாலிக்(ரஹ்) - மதீனா - சவுதி அரேபியா இமாம் கஸ்ஸாலி(ரஹ்) - துஸ் - ஈரான் மௌலானா ரூமி(ரஹ்) - பலக் - ஆஃப்கானிஸ்தான். வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரி

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் !!!

Image
காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது. ஞான மேதை கீழக்கரை தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவராக விளங்கும் பேற்றினை பெற்றார்கள். தமது பத்தாம் வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்து, பின் இஸ்லாமியக் கலை ஞானங்களை கற்றுத் தேர்ந்தனர். தமது ஆசிரியரின் மகளான சாரா உம்மாளை மணமுடித்தார்கள். அதனால் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டதால் மாப்பிள்ளை லெப்பை ஆலிமாக-இமாமுல் அரூஸாக அழைக்கப்பட்டார்கள்.  தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள். இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!!! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள்.  மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணிய மிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவு ம், உருவாக்க

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 50ம் ஆண்டு நினைவு நாள் விழா

Image
முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!    முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா  செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின்,  50ம் ஆண்டு நினைவு நாள் விழா 28.7.2016 அன்று பனைக்குளம்  முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய  முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின்  நிர்வாகிகள் முன்னிலையில், பனைக்குளம் மகான் பாபா  செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா  ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு மஜ்லிஸும், அதனை தொடர்ந்து யாஸீன் ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.  இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை,வாலிநோக்கம்,ஆற்றங்கரை,அழகன்குளம், புதுவலசை,  அத்தியூத்து, சித்தார்கோட்டை,வாழூர்,பெருங்குளம், உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் மகான்பாபாவின்  நேசர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின்

முஸ்தபா மஸ்லஹியின் முன் மண்டியிட்ட வஹ்ஹாபிசம் ( த த ஜ )

Image
கோவையில் நடந்த மாநாடு ஒன்றில் வஹ்ஹாபிகளே! உங்களுக்கு ஆண்மை இருந்தால் நீங்கள் பெட்டைகள் இல்லையென்றால் வாதத்துக்கு வாருங்கள் என ஓர் குரல் ஒலித்து சொரணைகெட்டுக் கிடந்த வஹ்ஹாபிசத்துக்கு கொஞ்சம் ரோஷமேற்றியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் முஹம்மது முஸ்தபா மஸ்லஹி என்னும் வஹ்ஹாபிசத்தின் சிம்ம சொப்பணம்!ரோஷத்தி விளைவு வேறு வழியில்லாமல் விவாத களத்தை சந்தித்து தனக்கு தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார்கள ததஜ மூடர்கள்.விவாதத்தில் த த ஜ வினர் எழுந்து நிற்க முடியாத வகையில் சொத்தைகளாக்கப்பட்டனர். திருக்குர் ஆனில் எழுத்துப்பிழையென ஓர் கொள்கையை வகுத்து யூத கைக்கூலித்தனத்தின் முழு செல்லப்பிள்ளைகளாக வலம் வந்த ஜெயினுலாபிதீன் கோஷ்டியினரின் வேஷ்டியை தூத்துக்குடியில் அவிழ்த்தெறிந்ததில் தொடங்கியது மஸ்லஹியின் விவாதப்பயணம்! அல்ஹம்துலில்லாஹ்! அற்புதமான பேச்சாற்றலும் தெளிவான சொற்களும் கொண்ட முஸ்தபா மஸ்லஹியின் வாதங்களுக்கு முன் வஹ்ஹபிசத்தால் எழுந்து நிற்கமுடியவில்லை.இதுவே கோவை விவாதத்திலும் தொடர்ந்தது. எந்தெந்த ஹதீதுகளை எல்லாம் ஆபாசம் என த த ஜ காபிர்கள் மறுத்து வந்தார்களோ அவை அத்துனையையும் தெளிவாக மொழிப

யார் இந்த தலைமை காஜி !!!

Image
அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தி

தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!

Image
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா”  முப்தி டாக்டர் செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன்  ஐயூப் அல் அஸ்ஹரி  M.A, M.Phil, Phd.  . இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான  எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில்  முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில்  டாக்டர் பட்டம் பெற்றவர். . 1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர். . 2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர். . 3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர். . 4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர். . 5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர். . இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். . காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி

பனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி மஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) அவர்களின், நினைவு நாள் விழா,

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!! பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம், ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி)  ஹழரத் கிப்லா அவர்களின்,50- ஆம் ஆண்டு நினைவு  நாள் விழா, நாள்  ( 28-07-2016 ) வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு 7-00 மணிக்கு தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு,   ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான  இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ  அன்புடன் அழைகின்றோம். இப்படிக்கு. மௌலானா மௌலவி அல்ஹாஜ்              M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                

ஈத் முபாரக் ( புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.)

Image
முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே!  சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து  வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல  அல்லாஹ்  இந்த ரமழான்  மாதத்திலே நமக்கு வழங்கினான். பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள்  தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும்,  அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே!  உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க  இருக்கின்ற,  உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு  நோன்புப் பெருநாள்  நல் வாழ்த்துக்களையும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து  தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

பெருநாள் அன்று பேன வேண்டியவை !!!

Image
1.அதிகாலையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது. 2.மிஸ்வாக் செய்து வாயைச் சுத்தப் படுத்துதல். 3.ஈது தொழுகைக்காக குளிக்கிறேன் என்ற  நிய்யத்துடன் குளித்தல். 4.உணவு உண்டுவிட்டுத் தொழுகைக்கு வருதல். 5.ஆகுமான நல்ல ஆடைகளை அணிதல். 6.நறுமணம் பூசுதல்,சுருமா இடுதல். 7.பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றுதல், 8.சந்தோசத்துடன் இருத்தல்,சந்தோசத்தை வெளிப்படுத்துதல், 9.முஸாபஹா,முஆனகா செய்து வாழ்த்துக்களைப்  பறிமாறிக்கொள்ளுதல். 10.தர்மங்கள் அதிகமாக செய்தல். 11.உறவுகளைச் சந்தித்து அன்பை பறிமாறுதல். 12.அனாதைகள்,ஏழைகள்,நோயாளிகளுக்கு உதவிகள் புரிதல். 13.அல்லாஹ்வின் அன்பும்,நட்பும், நெருக்கமும் தரும்  காரியங்களை எப்பொழுதும் செய்தல். 14.பெருநாள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் போவதற்கும்  வருவதற்கும் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள்.  ஆதாரம் ; புகாரி. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு