தூக்கம் !!!


"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் :
* பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது 
வறுமையை உண்டாக்கும்.

* லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில் 
சோம்பலை ஏற்படுத்தும்.

* சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில் 
தூங்குவது அறிவாற்றலை அதிகப்படுத்தும்.

* சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம் 
சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும் 
தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும்.

* பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது 
அழிவை ,நாசத்தை ஏற்படுத்தும்.

மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில் 
கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது 
அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும்.


அதிகமான தூக்கம் கீழ் காணும் 
விளைவுகளை ஏற்படுத்தும் ,

* மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும்,

* சளியை அதிகப்படுத்தும்,

* உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்.,

* வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்,

* பார்வையை பலகீனப்படுத்தும்..

இன்னும் இது போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றது.
எனவே ஸுப்ஹு , அசர் நேரத்தில் தூங்குவது இதை 
விட தங்கடமானதும் கெட்டதுமாகும்.

( நூல் - முஹிம்மாதுள் முதஅல்லிமீன்)


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு