Posts

Showing posts with the label chittarkottai

தமிழக அரபுக் கல்லூரிகளின் இவ்வருடத்தின் பட்டமளிப்பு பெருவிழாக்கள்

Image
இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை அல்-ஜாமியத்துல் அரூஸிய்யா தைக்கா அரபுக் கல்லூரியின்  மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா ஜூலை 1 ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ தலைவரும்,அகில உலக ராத்திபத்துல் ஜலாலிய்யா,காதிரிய்யா தரீக்காவின் ஷைகுமான,டாக்டர் மௌலானா மௌலவி அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் தலைமை தாங்கி  ஸனது வழங்கினார்கள்.சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,சென்னை கைருல் பரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையாற்றினார்கள். காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.கேரள மாநிலம் கோடம் பழா தாருல் மஆரிஃப் அரபுக் கல்லூரித் தலைவர்,மௌலானா உஸ்தாத் பி.எஸ்.கே.மொய்து பாக்கவி,காயல்பட்டினம் அல் ஜாமிஉல்-கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும்,முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான,வரலாற்று விரிவுரையாளர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எச்.எ.அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கேரள மாநிலம் மஹ்ழ

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற புனிதம் வாய்ந்த ஸலவாத்து மஜ்லிஸ்

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்!! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சிகாம்புட்,மதரஸா மன்பவுல் உலூமில் 1மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் ''யார் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்கிறார்களோ நாளை மறுமையில் என்னோடு மிக நெருக்கமாக இருப்பார்கள்''இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரும் வகையில் 10 லட்சம் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நிகழ்ச்சி, கடந்த 23-06-2012 சனிக்கிழமை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஒரு மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நடைபெறுவது, மலேசியாவிலேயே இதுவே முதன் முறையாகும்.நிகழ்ச்சிக்கு கேரள மாநிலத்திலிருந்து இமாம் பாபுஜி தங்கள் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை தந்து மஜ்லிஸை வழிநடத்தினார்கள்.ஜொகூர் மலபார் சங்க ஏற்பாட்டில் பேருந்துகளில் மக்கள் வருகைதந்தனர்.மேலும் சிங்கப்பூர்,பினாங்கு,பேரா,மலாக்கா,கெடா,சிலாங்கூர் போன்ற மாநிலங்களிலும் இருந்தும் பலர் தனித்தனியாகவும்,கலந்துகொண்

நன்மைகளை அள்ளித் தரும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின்   நல்   அடியார்களே !  நன்மைகளை கொள்ளை கொள்ளக்கூடிய, இன்னும் பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய, சங்கையான, புனிதம்   நிறைந்த   மாதத்தை   நாம்   அடைய இருக்கிறோம். அல்ஹம்து   லில்லாஹ்.   இம்   மாதத்தில்   நாம்   அதிகமான   நல்  அமல்கள்   செய்ய  வே ண்டும் .1- இமாம்  ஜமாஅத்துடன்   ஐங்காலத்   தொழுகைகளை,   தக்பீர்   தஹ்ரீமாவுடன்   தொழ   வேண்டும் . 2-  குர்ஆன்   ஷரீஃப்  அதிகமாக   ஓத  வே ண்டும் . 3- 20- ரகஅத்துகள்   முழுமையாக   தராவீஹ்   தொழுகையை   நிறைவேற்ற   வேண்டும் . 4- இந்த   வருடத்தின்   ரமலான்   மாதத்தின்   ஃபர்ளான   நோன்பை   நாளை   பிடிக்க   நிய்யத்து   செய்கிறேன்,   என்று   நிய்யத் வைத்து   நோன்பு   வைக்க   வேண்டும் .  5-  பரக்கத்தான   ஸஹர்  உணவை   சாப்பிட்டு   நோன்பு   வைக்க   வேண்டும் . 6- அல்லாஹ்விடத்தில்   துஆச்   செய்த   பிறகே   நோன்பு   திறக்க வேண்டும் . 7- ஷரீஅத்   முறைப்படி   எந்தெந்த   பொருட்களுக்கு   ஜகாத்   கொடுக்க   வேண்டுமோ   அத்தகைய  பொருட்களை    கணக்கிட்டு   தனது   குடும்பத்தி

மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

Image
முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!!  அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்  கோலாலம்பூரில் உள்ள  P.W.T.C  அரங்கத்தில் அனைத்துலக  54- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி  (6-07-2012)   முதல் (13-07-2012)  வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்து முடிந்தது .  இதில் நாற்பத்தி நான்கு  நாடுகள் பங்கு பெற்றன . உலகத்திலேயே  தொடர்ந்து  54- வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி  மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் ,  பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் ,  மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் ,  ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா  முதலிடத்தையும் ,  இந்தோனேசியாவைச் சார்ந்த    காரீயா  இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர் . இதில் 72-காரீகளும்,27-காரீயாக்களும்,கலந்து கொண்டார்கள். இதில் பல நாடுகளின் காரீகள்

ரஜப் பிறை 13-முதல் ஷஅபான் பிறை 2-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

Image
சமுதாய பெருந்தலைவருமான,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 117--வது பிறந்த  நாள் ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 8-30 மணிக்கு சென்னை வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் ஜியாரத் ஃபாத்திஹா, மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.ஜியாரத் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாபநாசத்தில்  நடைபெற்ற வெள்ளம் ஜீ அவர்களின் இல்லத் திருமண விழாவில், காயல் பட்டினம் முஅஸ்கரியா மதரஸாவின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி  ஹஜ்ரத் அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.ஹாஜா முயீனுத்தீன் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.வழுத்தூர் முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹபீபுல்லாஹ்ஷா ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்கள் முனீருல் மில்லத் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள்,தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர்,பேராசிரியர்,டாக்டர் சே.மு.மு. முஹம்மது அலி ஆகியோர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி துஆச்

கண்ணியத்திற்குரிய உலமாக்களின் மேலான கவனத்திற்கு!

Image
1-இமாம்களின் அந்தஸ்த்தையும்,இமாமத்தைச்சார்ந்த சேவைகளையும் சிறப்பாக்கி கொள்ள கிறாஅத் முதல் இமாமத் கித்மத்திற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு  பயிற்சிகளும்,வழிகாட்டல்களும். 2-சிறந்த தலைப்புகளையும் அதற்கு பொருத்தமான தகவல்களையும் சேகரம் செய்து பயனுள்ள முறையில் சொற்ப்பொழிவு ஆற்றுவதற்கு தேவையான பயிற்ச்சிகள்.  3-ஆழமான கருத்தாய்வுகளைச் செய்து சீர்திருத்த கட்டுரைகளை வரைவதற்கான எழுத்துப்பயிற்சிகள். 4-மஹல்லாவிலுள்ள சிறார் முதல் அனைத்து தரப்பினரின் மார்க்க கல்வி மேம்பாட்டுக்கு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல்கள்,பயிற்சிகள். 5-மஹல்லா கட்டமைப்பும்,சகோதர சமயத்தவருடனான நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட தேவையான வழிகாட்டல்கள்,பயிற்றுவிப்புகள் 6-கம்யூட்டரை இயக்கிடவும்,குறைந்த செலவில் இண்டர்நெட் சென்டர்களை பயன்படுத்தி அதில் நிறைவாக வெளியிடப்பட்டிருக்கும் குர்ஆன் ஹதீஸ்,ஃபிக்ஹின்  பரவலான தகவல்களை அறிந்து சுய நிலையில் மார்க்க ஞானத்தை  வளர்த்துக் கொள்ளவும்,தற்கால சமூக தேட்டங்களுக்கு,ஈடுகொடுக்கும் வகையில் தீனின் சேவைகளை சிறப்பாக ஆற்றிடவும் தேவையான பயிற்சிகள். 7-அரசின் சிறுபாண்மையினருக்கான உதவிகளை பெறுவத

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினேழாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1433-ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 17-  (8-07-2012)  ஞாயிறு மாலை, திங்கள் இரவு  7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 17- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் தலைமை ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள். தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள். தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள் அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். புரவலர் –முஹம்மதியா பள்ளிகள் ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர்- முஹம்மதியா பள்ளிகள். சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள். தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி. வரவேற்புரை- ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள். டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி ஸனது வழங்கி சிறப்புரை மௌலானா

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த பராஅத் இரவு

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாஸின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,திக்ரு மஜ்லிஸ்களும்,தஸ்பீஹ் தொழுகைகளும்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான மேலப்பாளையம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ S.S.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹழரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ M.நாஸீர் அலி ஆலிம் உமரி M.A.ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதுபோன்று பினாங்கு மாநிலம்,மற்றும் மலேசியாவில் உள்ள இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட அதிகமான இடங்களிலும்,உலகம் முழுவதிலும் அதிகமான இடங்களில் புனிதம் நிறைந்த பராஅத் இரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.உலகம் முழுவதும் இச்சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமானோர் கலந்துகொண்டு கப்ரு ஜியாரத் செய்தும்,நோன்புகள் வைத்தும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள். ஜூலை 5--ஆம் தேதி இரவு ஷபே பராஅத் என தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பு தமி

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 68-ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்

Image
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி   1433- ஷஅபான் பிறை  10-(1-07-2012) ஞாயிற்றுக்கிழமை  காலை  9-00-  மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் தலைமை- J.M.A  அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் . வரவேற்புரை J.M.A.  அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ்  P.A.முஹம்மது எஹ்யா அவர்கள் .                    ஸனது வழங்குபவர்கள் ஷைகுல் ஜாமிஆ ,  ஸத்ருல் முதர்ரிஸீன் ,  முஃப்தி ,  அல்லாமா ,  ஹாஃபிழ் ,  காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும் , மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப் பொழிவாற்றுவார்கள். பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஃப்தி ,  அமீரே ஷரீஅத் கர்நாடகா , மரியாதைக்குரிய   முஹம்மது அஷ்ரப் அலி பாக்கவி ஹள்ரத் அவர்கள் . சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல்  தலைமை இமாம்   மௌலானா மௌலவி ஹாஃபிழ்                                 M. சதீதுத்தீன் ஹள்ரத் பாக்கவி அவர்கள் . ம

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு