மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி


முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 54-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (6-07-2012)  முதல்(13-07-2012) வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்துமுடிந்ததுஇதில் நாற்பத்தி நான்கு  நாடுகள் பங்கு பெற்றன.உலகத்திலேயே தொடர்ந்து 54-வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஆண்களும்பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.ஆண்களில்மலேசியாவைச் சேர்ந்த காரீ,முதலிடத்தையும், ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும்இந்தோனேசியாவைச் சார்ந்த  காரீயா இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர். இதில் 72-காரீகளும்,27-காரீயாக்களும்,கலந்து கொண்டார்கள்.இதில் பலநாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள்.எட்டு தினங்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானக,என்றும் கலந்து கொண்ட அனைத்து காரீகளுக்கும், காரீயாக்களுக்கும் அல்லாஹ் மென்மேலும் பல சிறப்புகளையும் வழங்குவானாகவும், என்றும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள் அகமுவந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.ஆமீன்வஸ்ஸலாம்..

வெளியீடு-மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு