Posts

Showing posts with the label புனிதம் நிறைந்த பராஅத் இரவு

புனிதம் நிறைந்த பராஅத் இரவு

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும், திக்ரு மஜ்லிஸ்களும், தஸ்பீஹ் தொழுகைகளும், கோலாலம்பூர்  மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம்  பாகவி & தேவ்பந்தி ஹளரத் மற்றும் துணை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்ஹாஃபிழ் M,நாசீர் அலி உமரி ஆலிம் ஹளரத் M.A ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இது  போன்று  பினாங்கு, மற்றும் மலேசியாவில்  உள்ள இருநூற்றுக்கும்  மேற்பட்ட மதரஸாக்களிலும்,   இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்  மிகச்  சிறப்பாக நடை பெற்றது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில் பல கோடிக் கணக்கானோர் கலந்து கொண்டு, கப்ரு ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொண்டனர் வஸ்ஸலாம்.. வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு