Posts

Showing posts from March, 2014

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்

கடலோரம் வாழும் காதிர் மீரான் உம்வாசல்தேடி  வந்தோம் சாஹே மீரா உம்மை ஒருபோதும் நான் மற்வேன் நமணை விரட்ட                                                                                      கருனை கடலாம் காதிர் வலியின்

Don't upset துன்பம் கண்டு துவண்டு விடாதீர்!

Image
மரணமும் இரணமும் தேடி வரும் எங்கிருந்தாலும் இறைவனின் விதி அடைந்தே தீரும் துன்பம் கண்டு துவண்டு விடவேண்டாம் ஜும்ஆ உரை (28-03-2014)

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் புனித வரலாறு

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் THE NAGOR SAINTS

நமது நாயகம்   நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி)  அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்  NAGOR SESSIONS - THE SAINT

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்

THE NAGOR SAINTS

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 1 -04-2014  செவ்வாய்க்கிழமை மாலை,புதன் இரவு ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1435 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது  என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மௌலிது ஷரீஃப்  -10-4-2014 (ஜமாதுல் ஆகிர் பிறை 10-1435 ) வியாழக்கிழமையோடு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும், மஸ்ஜித் இந்தியாவின்  கண்ணியமிகு இமாம், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா, அவர்களின்  சீரிய தலைமையில் நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பைய

நமது நாயகம் நாகூர் குத்துபு ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து

Image
                                               யாஸய்யிதீ ஷைகீ பைத்து இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே! சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே! கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!! சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே! தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு நேரடியாக வழமைக்கு மாற்றமான புதுமைகள் எத்தனையோ வெளிப்பட்டன. செழிப்பான முகத்தில் சம்பூரண இன்பங்கள் எல்லாம் தங்களுக்கென்றே நிறைவ

இறைநேசச் செல்வர் மஹாராஜா டத்தோ ஷைகு அப்துல் ஜலீல் (ரலி) அவர்களின் வருடாந்திர கந்தூரிப் பெருவிழா

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் பெருவிழா  மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்திதுஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

புதிரும் பதிலும் - 3

Image
பிரார்த்தனை ஏற்கப்படாததேன்? ஒரு நாள் மகான் இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் பஸராவின் கடைத்தெரு வழியாக நடந்து சென்றார்கள்.அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள்! நாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.அவனிடம் அதிகமாகப் பிரார்த்திக்கிறோம்.ஏனோ அல்லாஹ் எங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை.இது ஏன்? என்று வினவி னார்கள். அதற்கு இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அது ஏனென்றால், உங்கள் இதயங்கள் பத்து செயல்களைக் கொண்டு மரித்துப் போய் விட்டது. 1)     அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள்.ஆனால் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில்லை. 2)      அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்களை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் அவர்களின் சுன்னத்தான நடைமுறைகளை விட்டு விட்டீர்கள். 3)      குர்ஆன் ஓதுகிறீர்கள்.அதன் படி நடப்பதில்லை. 4)      அல்லாஹ்வின் அருள்கொடை [யான உணவு] களை உண்ணுகிறீர்கள்.அதற்கு நன்றி செலுத்துவதில்லை. 5)      ஷைத்தான் உங்களுடைய விரோதி எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.ஆனால் அவனுக்கு மாறு செய்வதில்

மலக்குமார்களுடன் மானசீக நட்பு

  22 -03 -2014  சனிக்கிழமை தஃப்ஸீர் வகுப்பு   தலைப்பு ;- மலக்குமார்களுடன் மானசீக நட்பு.   பேருரை ;- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்  எ.ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி,ஃபாஜில் தேவ்பந்தி. தலைமை இமாம், மதரஸா இமாம் கஜ்ஜாலி,செலயாங்,  கோலாலம்பூர், மலேசியா.

புதிரும் பதிலும் -2

Image
புதிர் போட்ட பாதிரிக்கு பாடம் புகட்டிய பிஸ்தாமி. மகான் ஹளரத் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் மிகப்பெரிய மெஞ்ஞானி.அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த இறைநேசரிடம் ஒரு நாள் ஒரு பாதிரியார் தனது சீடர்கள் புடைசூழ பந்தாவாக வந்தார்.பிஸ்தாமி அவர்களை பயந்து பின் வாங்கச் செய்யும் பல புதிர் கேள்விகளை பாதிரியார் மிக கம்பீரமாக கேட்டார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதறாமல் சட்டென்று பதில் கூறி பாதிரியாரை வியக்க வைத்தார்கள் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள். இப்போது அந்த பாதிரியாரின் புதிர்களையும் பிஸ்தாமியின் புத்திசாலித்தனமான பதில்களையும் பார்ப்போம்! 1, ஒன்று தான் உள்ளது. இரண்டு இல்லை. அது என்ன? அல்லாஹ் ஒருவன். قل هو الله احد  நபியே கூறுங்கள் [அந்த] அல்லாஹ் ஒருவன் தான். [அல்குர்ஆன் :112 ;1] 2, இரண்டு தான் இருக்கிறது. மூன்று இல்லை. அது என்ன? இரவும் பகலும். وجعلنا الليل والنهار ايتين நாம் இரவையும் பகலையும் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம். [அல்குர்ஆன் :17 ;12] 3, மூன்று தான். நான்கு இல்லை. அது என்ன? கிள்ரு நபி [அலை] அவர்கள், மூஸா நபி [அலை] அவர்களுக்கு நடத்திய பாடத்தின் தலைப்புகள் மூன்று தான். 1] கப

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

Image
اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (65:12)  கடந்த 8 - 3 – 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட போயிங் 777 – 200 ரக மலேஷியா விமானம் வியட்நாமிய வின்வெளி யில் தென்சீனக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது அது ராடாரிலிருந்து மறைந்து காணாமல் போனது.அதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும்,12 சிப்பந்திகளும் இருந்தனர்.இதில் இரண்டு கைக்குழந்தைகள். அந்த விமானம் என்ன ஆனது? அதிலிருந்த பயணிகள்,சிப்பந்தி களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதில் இந்த விமானத்திற்கு

WE PRAY CONTINUOUSLY தொடர்ந்து பிரார்த்திப்போம்

21 -03 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.  தலைப்பு ;- மாயமான மலேசிய விமானம்: பல நாட்களாகியும் மர்மமாகவே உள்ளது. மக்கள் சடைந்துவிட வேண்டாம்-  குத்பா பேருரை ;- மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி, தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

இலங்கை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவில் மாபெரும் மீலாத் பெருவிழா !

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

உஸ்மானிகள் பேரவை மற்றும் மஸ்ஜிதே முஹம்மதிய்யா & மதரஸா பள்ளிவாசல் இணைந்து நடத்தும் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு !

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கப்ரு ஜியாரத் பற்றிய தெளிவான ஆதாரங்கள் !!!

Image
♣ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது. இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154 ♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள். புரைதா ரலியல்லாஹு அன்ஹு ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான். ♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள். தபரானி 3 - 241 ♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுப

அர்த்தமுள்ள காதலும் ஆகாத அனாச்சாரங்களும் !!!

மலேசியத் தலை நகர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா,மௌலவி,அல்ஹாஃபிழ், அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் வெள்ளிக்கிழமை குத்பா பேருரை )

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு