Posts

Showing posts from September, 2016

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!

Image
பெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ   மு தஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா !!! அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து  '' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம்  ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில், சித்தார்கோட்டை,சின்னப் பள்ளிவாசலில்,மிகச்சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.                           ஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு  குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும், மலை பைத்துகளும்,ஓதப்பட்டு, உலக  மக்களின் நலனுக்காகவும்,ஊர் மக்களுக்காகவும்  சிறப்பு துஆச்செய்யப்பட்டது. .'' சூஃபி ஹழரத் '' என்றும் ''  சேது நாட்டின் தீன் முத்து ''  என்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய  ஆலிம் ஷாஹிப் அவர்களைப்பற்றி, சித்தார்கோட்டை  ஜாமிஆ மஸ்ஜிதின் தலை

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!

Image
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து  என்றும்  புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர்  அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள்  இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார் கோட்டையில்  கி.பி.1882 ல் பிறந்தார்கள். தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே  வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா )  அனுப்பி  வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில்  விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம்  சாஹிபின் ஆதரவில், அதிராம்பட்டணம்  சென்று  மார்க்க கல்வி பயின்றார்கள். பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில்  ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு, அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம்  பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக்  கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள். அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்  '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற  பெயருடன்  ஒரு கல்விக்கூடத்தை  நிர்மாணித்து  மார்க்கப் பணிபுரிந்து வந்தனர். '' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  &#

சித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி இன்று ஊர் திரும்பினார்கள் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!! அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா  அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில்  மன்பயீ ஹழரத் அவர்கள், 20-09-2016  இன்று தன்னுடைய 20 வது  புனித ஹஜ்ஜை நிறைவேற்றி  ஊர்வந்த அவர்கள், இன்று காலை  சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு  பயான்  செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்  ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு  இன்னும்  பல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை  வழங்குவானாக ஆமீன். நன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர். வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!! அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இனிய தமிழுக்கும் அரபிமொழிக்கும் இடையிலுள்ள இணைப்புப்பாலம் "ஆலிம் கவிஞர் மௌலானா மௌலவி  தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்கள். . தமிழ்நாட்டின் தென்முனையாகிய குமரி மாவட்டத்தின் தென்மேற்குக் கரையிலுள்ள தேங்காய்ப்பட்டினம் என்ற வரலாற்றுப் பழமை வாய்ந்த கடலோரக் கிராமத்தில் பிறந்த "ஆலிம் கவிஞர் " தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்களை பற்றிய பல்வேறு தகவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் . தமிழ் முஸ்லிம் சமுதாய மக்களிடையே - சிறந்த ஆன்மீக - சமுதாய மற்றும் இலக்கிய சொற்பொழிவாளர் , எழுத்தாளர் என்ற வகையில் - நன்கு அறிமுகமானவர். தமிழ்ச் செம்மல் இறையருள் கவிமணி டாக்டர் கா.அப்துல் கபூர் அவர்களை ஆசானாக ஏற்று தமிழ்க் கவிதை பயின்ற இவர்,அன்னாரின் தலைமையில் 7 கவியரங்குகளில் கவிதை வாசித்தவர்.இவரின் முதல் கவியரங்கிலேயே இறையருள் கவிமணியால் - " தேன் போன்ற கவியெழுதும் கையுடையார் " - " தேங்காய்ப்பட்டினத்தார் " என்ற இரட்ட

பெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி !!!

Image
பெருநாளன்று மலாய் பெருமக்கள் குபூர் ஜியாரத்  செய்வார்கள் இந்த நல்ல பழக்கத்தை சிலர் ஆட்சேபம்  செய்து குறை கூறுகிறார்கள் இது சரியா ? பதில்: மலாய் சகோதரர்களின் சிறந்த இந்த சுன்னத்தான  காரியத்தை மறுப்பதற்கு ஷரீஅத்தில் எந்த முகாந்திரமும்  இல்லை சியாரத் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட  ஒரு சுன்னத்_நபிவழியாகும். தொழக்கூடாத நேரம் உண்டு நோன்பு வைக்ககூடாத  நாட்கள் உண்டு இதுமாதிரி சியாரத் செய்யக்கூடாத  நேரமோ  நாட்களோ ஷரியத்தில் இல்லாத போது  பெருநாளன்று  ஜியாரத் செய்யக்கூடாது  என தடை  செய்வதற்கு யாருக்கும் எந்த  அதிகாரமும் இல்லை. சியாரத் செய்யுங்கள் என்பது  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம்  அவர்களின் உத்தரவு.இந்த உத்தரவுக்கு  எதிரான எந்த  கருத்தையும் யார் சொன்னாலும் அதை தூக்கி எறிந்து  விடவேண்டும்.இன்னும் சொல்லப்போனால் பெருநாள்  அன்று சியாரத் செய்வது சிறந்தது என்று சொல்ல வேண்டும். ஏனெனில் பெருநாள் என்றால் கொண்டாட்டம் எனக்கருதி  ஆட்டம்  பாட்டத்தில் நமது மக்கள் ஈடுபட்டு மார்க்க விரோத  காரியத்தில் விழுந்து விடக்கூடாதுஎன்பதற்காக பெருநாள்  சந்தோஷத்தை நல்ல படிப

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது. மன நிம்மதி நிறைகிறது. உறவுகள் ஒன்று கூடுகிறது. ஏழைகள் பசியாறுகிறார்கள். பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது. இறையருல் இறங்குகிறது. தியாக உணர்வு உயர்கிறது. ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது. கூட்டுறவு மேம்படுகிறது. வறியவர்கள் வளம் பெறுகிறார்கள். அனாதைகள் பலம் பெறுகிறார்கள். முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்  நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும்  அன்பையும், அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும்  சுன்னத் வல்  ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும், தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி, அகமகிழ்ந்து துஆச்  செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottai sunnathjamath  blogspot.com .

நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image
ஹஜ் மற்றும் குர்பானி இன்னும் புனிதம் வாய்ந்த  மதீனா முனவ்வராவைப்பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்? ஹாஜிகள் இனிமேல் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?

Image
10-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை ;- தலைப்பு ;-  ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?  குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.கிப்லா அவர்கள் தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.

ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!

Image
ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது. எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல் போன ஹாஜி , அடுத்து வரும் இரவ

பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்?

Image
05-10-2014 ஞாயிற்றுக்கிழமை  ஹஜ்ஜுப் பெருநாள்  சிறப்புப்பேருரை  . தலைப்பு ;-   பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்? மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு