Posts

Showing posts from 2018

தமிழ்நாடு அரசின் தலைமை காழியாரின் ஹஜ்ஜுப் பெருநாள் அறிவிப்பு !!!

Image

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நடைபெற்ற கப்ரு ஜியாரத் !!!

Image
சித்தார் கோட்டையில் ஹஜ்ஜுப் பெருநாள்  அன்று நடைபெற்ற கப்ரு ஜியாரத்தில் ஏராளமான  ஸாலிஹீன்கள் கலந்து பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சித்தார் கோட்டை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை !!!

Image
சித்தார் கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்  சுன்னத் ஜமாஅத் பெரிய பள்ளிவாசலில்  22-08-2018 அன்று நடைபெற்ற  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை !!!   

புனித தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது. மன நிம்மதி நிறைகிறது. உறவுகள் ஒன்று கூடுகிறது. ஏழைகள் பசியாறுகிறார்கள். பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது. இறையருல் இறங்குகிறது. தியாக உணர்வு உயர்கிறது. ஜீவ காரூண்யம் நிலை நாட்டப்படுகிறது. கூட்டுறவு மேம்படுகிறது. வறியவர்கள் வளம் பெறுகிறார்கள். அனாதைகள் பலம் பெறுகிறார்கள். முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்  நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும், அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,  தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து  துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottai sunnathjamath blogspot.com.

அல்லாமா O.M அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எங்களது ஆசான் பெருந்தகை அல்லாமா கலிஃபத்துஷ்ஷாதுலி  O.M அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.... இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான உலமாப் பெருமக்களும்,நூற்றுக்கணக்கான இஸ்லாமிய  பெருமக்களும் கலந்து பயன் அடைந்தனர்.வஸ்ஸலாம்.

மதுரை தாருல் உலமாவில் நடைபெற்ற ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரையிலுள்ள தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா  தலைமையகம் தாருல் உலமாவின் மாநாட்டு ஹாலில்  ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 16-07-2018அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். மதுரை மற்றும் சுற்று பகுதியிலிருந்து புனிதப் பயணிகள்  சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆஷிக்குர் ரஸுல் அல்லாமா O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா -அழைப்பிதழ்.

Image

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா  செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின்  52ம் ஆண்டு நினைவு நாள் விழா 07.07.2018 அன்று  பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை,  முஸ்லிம் நிர்வாக சபை,  ஐக்கிய முஸ்லிம் சங்கம்,  வாலிப முஸ்லிம் சங்கம்  ஆகியவற்றின் நிர்வாகிகள்  முன்னிலையில் ஜும்ஆ  பள்ளிவாசலில், வலமை போல்  மிகச்சிறப்பாக நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு  மஜ்லிஸும் அதனை தொடர்ந்து யாஸீன்  ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.   இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை ,  அழகன்குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை,  வாழூர்,உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு  ஊர்களிலிருந்தும் மகான் பாபாவின் நேசர்கள்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின்  குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.

கோலாலம்பூரில் பனைக்குளம் செய்யிது முஹம்மது ஆலிம் அவர்களுக்கு குர்ஆன் ஓதி துஆச்செய்யப்பட்டது !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கோலாலம்பூர்,செலாயாங் மதரஸா இமாம் கஜ்ஜாலியில்  06-07-2018 அன்று இரவு வலமை போல் கஸீதத்துல்  புர்தா ஷரீஃப்  மஜ்லிஸ் நடைபெற்றது. புனிதம் வாய்ந்த புர்தா ஷரீஃப் மஜ்லிஸை தொடர்ந்து, பனைக்குளம் மஹான் பாவாவின் 52 ஆம் ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு,பனைக்குளம்  மஹான் பாபா ஷைகுனா செய்யிது முஹம்மது  ஆலிம் ஹழ்ரத் கிப்லா அவர்களுக்கு  குர்ஆன் ஓதி துஆச்செய்யப்பட்டது. ஆரம்பமாக ஹத்தமுல் குர்ஆன் துஆவை மௌலவி  மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் மன்பயீ ஓதினார்கள். மஜ்லிஸின் இறுதியாக,பனைக்குளம் மஹான் பாவாவின்  சிறப்புகளை சொல்லி, செலாயாங் மதரஸா இமாம்  கஜ்ஜாலியின் ஆசிரியர் மௌலானா அல்ஹாஃபிழ்  ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹிஅவர்கள் சிறப்பு துஆ ஓதினார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான ஸாலிஹீன்கள்  கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு காஜியின் (காழி) நோன்பு பெருநாள் அறிவிப்பு !!!

Image
hli

ஞானக்கடல் ஆன்மீக குரு இறைநேசர் ஹழ்ரத்.முஹம்மது கமாலுத்தீன் ஆரணி பாவா ரஹ்மத்துல்லாஹி அலைஹி !!!

Image
மிகப் பெரும் பிரபால்யமான சம்பவம்!!! மிகப் பெரும் இறைநேசர் ஒருவர் தன் மூரிது மார்களை அழைத்து தான் சிறிது நாளில் வபாத்தாகிவிடுவேன் என்னை இந்த இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்னை அடக்கம் செய்யும் போது இந்த ஊர்க்காரர்கள் ஜமாத் காரர்கள் என்னை பொது கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய வேண்டும் என பிரச்சனை செய்வார்கள்.  இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு (தலப்பா )வரும் என்று ஒரு ஆலிம் ஆன்மீக பெரியாரை பெயர் சொல்லாமல் குறிப்பிட்டு இவர்கள் இந்த பிரட்சனையை சரி செய்வார்கள் வஸிலா செய்தார்கள். அதே போல் அந்த இறைநேசர் சிறிது நாளில் வபாத்தாகிறார்கள் அவர்களின் மூரீதுகள் தன் ஷெய்குவின் வஸிலா படி அவர்களை அவர்கள் சொல்லிய இடத்தில் அடக்கம் செய்யும் பொழுது அந்த ஊர் ஜமாத்தார்கள் இவர்களை பொது கபர்ஸ்தானில் தான் அடக்கம் செய்ய வேண்டும் பிரட்சனை செய்கிறார்கள். பெரிய சலசலப்பு எற்பட்டு கொண்டிருக்கிறது இச்சலசல இடையே அந்த கூட்டத்திற்க்குள் ஒரு அமைதி ஆம் அந்த கூட்டத்தில் மிகப்பெரும் இறைநேசர் ஒருவர் வருகிறார்கள் அவர்களை பார்த்தவுடன் அந்த ஊர் ஜமாத்தார்கள் அமைதியாகி விட்டார்கள். அந்த இறைநேசர் அங்கு சென்று இவர்களை அடக்கம் செ

மௌலானா அல்ஹாஃபிழ் P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத்

Image
அஸ்ஸலாமு அலைக்கும்... தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை... மாநில தலைவர் கண்ணியத்திற்குறிய காஜா முஈனுத்தீன் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் போட்டோவைத்தான் நீங்கள் இப்பொழுது பார்த்துகொண்டு இருக்கிரீர்கள்.. அல்ஹம்துலில்லாஹ். ஹஜ்ரத் அவர்களை பற்றி எதுவும் அறிமுகம் செய்து சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன்.  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ரத் அவர்களை அறிந்து இருப்பார்கள்.. தமிழக உலமாக்களுக்கு ஒரு சிறந்த தலைவரை தந்தமைக்கு அல்லாஹ்க்கே எல்லாபுகழும்.. ஹஜ்ரத் அவர்களை பற்றி நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் என்ற ஊரில் மக்களை வழிகெடுத்து கொண்டிருக்கும் TNTJ என்ற விபச்சார ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் (ஷம்சுல்லுஹா) என்ற மமதையில் இருக்ககூடிய நடமாடும் ஷைத்தான்..,  மக்களின் பொருளாதாரத்தை தவறான வழியில் பிடுங்கி தின்னும் கொள்ளையன்., PJ என்ற காம ஆசாமிக்கு மாமா வேளை பார்த்த பெண் உறுப்பு வணங்கி., வாலிபர்களை மூளை சலவை செய்து மத பிரச்சனையை உருவாக்கும் கிழட்டு நரி., வாலிபால் விளையாடாதே அது சிர்க் என்று சொன்ன இந்த ஈன நாய்... இன்று ஹஜ்ரத் அவர்களை கைது

மாநில ஜமாஅத்துல் உலமா சபை நன்றி !!!

Image
பெருநாள் மற்றும் நோன்புபிறை பற்றிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசு குழுவொன்று நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் எழுப்பிய போது முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை காஜியின் அறிவிப்பே இறுதியானது என்ற கருத்தை வலியுறுத்தியதற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுபக்கர் எம் எல் ஏ வுக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தார்கள். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்பதே சரியானது என்ற ஜமாஅத்துல் உலமாவின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் வலியுறுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

பிறை சம்பந்தமாக '' தலைமை காஜியின் முடிவே தமிழக முஸ்லிம்களின் முடிவு !!!

Image

பெருநாள் அறிவிப்பை வெளியிடுவதில் தலைமை காஜியின் அறிவிப்பே இறுதியானது !!!!

Image

கீழக்கரை செய்யிது ஹமீதா அரபுக் கல்லூரியின் பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா வஃபாத் !!!

Image
* கீழக்கரை செய்யிது ஹமீதா அரபிக்கல்லூரியின்  (தஹ்ஸீல்) பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா அதிக காய்ச்சல்  காரணமாக நேற்று 02-07-2018 அவரது ஊரில் வஃபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..! அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு மேல்  அவரது சொந்த ஊரான   (மதுரை)  பேரையூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மஃக்பிரத்திற்கு துஆ செய்வதோடு அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்கிற அழகிய பொறுமையை கொடுப்பதற்கும் துஆ செய்யுங்கள். தகவல்: மவ்லவி; முஹம்மது யூசுஃப் சிராஜி,பாஜில் ஜமாலி.   பேராசிரியர்:செய்யிது ஹமீதா அரபுக் கல்லூரி- கீழக்கரை.

துவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில  ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல்  உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில்  பாடத் துவக்க விழா  இன்று அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள்  மற்றும் மூத்தஆலிம்கள் கலந்துகொண்டனர். (தீனின் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது  அர்க்கம் ரளியல்லாஹுஅன்ஹூ வீடு.) (தாருல் உலமாவில் தொடங்கப்பட்ட ஹிஃப்ழு  மதரஸாவின்  பெயர் தாருல் அர்க்கம்.) வல்லஅல்லாஹு இம் மத்ரஸாவை கியாமத் வரை  சிறப்பாக செயல்பட செய்வானாக! ஆமீன்.வஸ்ஸலாம்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு