இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா !!!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 
52ம் ஆண்டு நினைவு நாள் விழா 07.07.2018 அன்று 
பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, 
முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், 
வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் 
முன்னிலையில் ஜும்ஆ பள்ளிவாசலில்,வலமை போல் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.


மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு 
மஜ்லிஸும் அதனை தொடர்ந்து யாஸீன் 
ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.
 





இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை , 
அழகன்குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை, 
வாழூர்,உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு 
ஊர்களிலிருந்தும் மகான் பாபாவின் நேசர்கள் 
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின் 
குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.


Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு