தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு 
வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.*

புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் நோன்பாளிகள் 
தராவீஹ் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் :*

*முதலாம் தராவீஹ் தொழுதவர்...*
*அன்று பிறந்தப் பாலகனைப் போல் ஆகிவிடுகிறார்.*

*2 ம் நாள் தொழுதவருக்கு...*
*அவரின் பெற்றோரின் பாவமும், அவரின் 
பாவமும் மன்னிக்கப் படுகின்றன.*

*3 ம் நாள் தொழுதவருக்கு...*
*அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ 
மன்னிப்புக் கேட்கிறார்கள்.*

*4 ம் நாள் தொழுதவருக்கு...*
*தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், குர்ஆன் ஓதிய 
நன்மைகள் வழங்கப்படுகின்றன.*

*5 ம் நாள் தொழுதவருக்கு...*
*புனித கஃபாவிலும், மஸ்ஜித் நவபி, மஸ்ஜிதுல் 
அக்ஸாவிலும்,தொழுத நன்மைகள் கிடைக்கும்.*

*6 ம் நாள் தொழுதவருக்கு...*
*பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும், 
அவருக்காக அனைத்து வஸ்துகளும் 
பிழை பொறுக்கத் தேடுகின்றன.*

*7 ம் நாள் தொழுதவருக்கு...*
*ஹள்ரத் நபி மூஸா* *(அலைஹிஸ்ஸலாம்) 
அவர்களின் சிறப்பு வழங்கப்படுகிறது.*

*8 ம் நாள் தொழுதவருக்கு...* 
*ஹள்ரத் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 
அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது*

*9 ம் நாள் தொழுதவருக்கு...*
*நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு* *அலைஹி வஸல்லம்) 
அவர்கள் இபாதத் செய்த நன்மைகள் கிடைக்கும்.*

*10 ம் நாள் தொழுதவருக்கு...*
*துன்யா, ஆகிரத் இரண்டிலும் நல்ல 
வசதிகள் வழங்கப்படுகிறது.*

*11 ம் நாள் தொழுதவருக்கு...*
*தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பாவமற்ற 
பாலகனைப்போல் துன்யாவிலுருந்து 
வெளியேறும் சிறப்புக் கிடைக்கின்றது.*

*12 ம் நாள் தொழுதவருக்கு...*
*மறுமையில் 14ம் இரவு பவுர்ணமி நிலவைப் 
போல் பிரகாசமாக ஆக்கப்படும் பேறு கிடைக்கும்.*

*13ம் நாள் தொழுதவருக்கு...*
*அனைத்து தீங்குகளை விட்டு பாதுகாக்கப்பட்டு 
நிம்மதி பெற்றவராகும் பேறு கிடைக்கும்.*

*14ம் நாள் தொழுதவருக்கு...*
*மலக்குமார்கள் இவரைக் கேள்வி கணக்கு இல்லாமல் 
சொர்கம் நுழையுங்கள் என்று சோபனச் செய்தி கிடைக்கும்.*

*15 ம் நாள் தொழுதவருக்கு...*
*அர்ஷ், குர்ஷியை சுமக்கும் மலக்குகளும், அவருடன் 
சேர்ந்து தொழும் பாக்கியம் கிடைக்கும்.*

*16ம் நாள் தொழுதவர்...*
*நரகிலிருந்து விடுதலைப்பெற்று சொர்கம் 
நுழைவிக்கப்படுவர்.*

*17 ம் நாள் தொழுதவருக்கு...*
*நபிமார்களுடைய நன்மைகள் வழங்கப்படுகிறது.*

*18 ம் நாள் தொழுதவருக்கு...*
*உம்மையும், உம் பெற்றோர்களையும் அல்லாஹ் 
பொருந்திக் கொண்டான் என்று மலக்குகள் 
நற் சோபனம் கூறுகிறார்கள்.*

*19 ம் நாள் தொழுதவருக்கு...*
*உயர்வான பிர்தவ்ஸ் எனும்*
*சொர்க்கம் வழங்கப்படுகிறது.*

*20 ம் நாள் தொழுதவருக்கு...*
*ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களின் 
நன்மைகள் வழங்கப்படுகிறது.*

*21ம் நாள் தொழுதவருக்கு...*
*சொர்க்கத்தில் பேரொளியால் ஆன 
மாளிகையை வழங்கப்படுகிறது.*

*22 ம் நாள் தொழுதவருக்கு...*
*மறுமையில் துக்கம்,கவலை 
சிரமங்களை விட்டுப் பாதுகாக்கப்படுவர்.*

*23 ம் நாள் தொழுதவருக்கு...*
*சொர்க்கத்தில் அழகிய பட்டணம் உருவாக்கப்படுகிறது.*

*24 ம் நாள் தொழுதவருக்கு...*
*(24வகையான) கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.*

*25 ம் நாள் தொழுதவருக்கு...*
*கப்ரில் ஏற்படும் வேதனைகளை அல்லாஹ் நீக்கி விடுகிறான்.*

*26 ம் நாள் தொழுதவருக்கு...*
*(40 வருடம்) வணங்கிய நன்மைகள் வழங்கப்படுகிறது.*

*27 ம் நாள் தொழுதவருக்கு...*
*மறுமையில் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தை மின்னல் 
வேகத்தில் கடக்கும்படி செய்யப்படுகிறார்.*

*28 ம் நாள் தொழுதவருக்கு...*
*அல்லாஹ் சொர்க்கத்தில் ஆயிரம் அந்தஸ்துகளை வழங்குகிறான்.*

*29 ம் நாள் தொழுதவருக்கு...*
*ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ்ஜுகள் 
செய்த நன்மைகள்* *எழுதப்படுகிறது.*

*30 ம் நாள் தொழுதவரைப் பார்த்து...* 
*அல்லாஹு த ஆலா, அடியானே! சொர்க்கக் கனியைச்*
 *சாப்பிடுவாயாக! ஹவ்துல் கவ்தர் நீரை அருந்துவாயாக! 
நீயே என் அடிமை, நான் உனது ரப்பு எனச் சோபனம் கூறுகிறான்.*
*அறிவிப்பாளர் :*
*ஹள்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
*ஆதாரம் :*
*தன்பீஹுல் காபிலீன்.*

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு