Posts

Showing posts with the label காட்டுப்பள்ளி அமீர் அப்பாஸ் மந்திரி

அமீர் அப்பாஸ் மந்திரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு

Image
                                                   ஸைய்யிதுல் ஹகீம் அல் ஆரிஃபு பில்லாஹ்  அஷ்ஷைகு ஏர்வாடி தர்ஹா ஷரீஃப்,காட்டுப் பள்ளியில், ஆன்மீக அரசாட்சி புரியும்  அமீர் அப்பாஸ் மந்திரி   நாயகம் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள், ரோமாபுரி  பேரரசில் பிரதான அமைச்சராக இருந்தார்கள்.  ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் கட்டளைக்கினங்க இந்திய போருக்காக மதீனாவின்  அரசாட்சியை விட்டுவிட்டு,  மார்க்க பணிக்காக புறப்பட்ட  பாதுஷா ஷஹீது நாயகம்  ரலியல்லாஹு அன்ஹு,  அது குறித்து சுற்றியுள்ள அனைத்து  இஸ்லாமிய அரசர்களுக்கும் கடிதம் அனுப்பி  கலந்து கொள்ள வேண்டினார்கள்.   ரோமாபுரி இஸ்லாமிய அரசின் மன்னராக இருந்த சுல்தான்  மஹ்மூது பாதுஷா அவர்கள் தம் சார்பாக பிரதம அமைச்சர்  அமீர் அப்பாஸ் ரலி.. அவர்கள் தலைமையில் சுமார் 3000க்கும்  அதிகமான படைவீரர்கள் கொண்ட ஒரு  பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.  இந்தியா வந்த பின் நடைபெற்ற அனைத்து போர்களிலும்,  போர் யுக்திகளை அமைப்பதில் அப்பாஸ் நாயகம் பெரும்  பங்காற்றி #பாதுஷா_நாயகம் அவர்களுக்கு வலது கரமாக  திகழ்ந்தார்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு