அமீர் அப்பாஸ் மந்திரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு

               
                                 
ஸைய்யிதுல் ஹகீம் அல் ஆரிஃபு பில்லாஹ் அஷ்ஷைகு ஏர்வாடி தர்ஹா ஷரீஃப்,காட்டுப் பள்ளியில்,ஆன்மீக அரசாட்சி புரியும் அமீர் அப்பாஸ் மந்திரி  
நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ரோமாபுரி பேரரசில் பிரதான அமைச்சராக இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைக்கினங்க இந்திய போருக்காக மதீனாவின் 
அரசாட்சியை விட்டுவிட்டு, மார்க்க பணிக்காக புறப்பட்ட பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அது குறித்து சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய அரசர்களுக்கும் கடிதம் அனுப்பி கலந்து கொள்ள வேண்டினார்கள்.

 

ரோமாபுரி இஸ்லாமிய அரசின் மன்னராக இருந்த சுல்தான் மஹ்மூது பாதுஷா அவர்கள் தம் சார்பாக பிரதம அமைச்சர் அமீர் அப்பாஸ் ரலி.. அவர்கள் தலைமையில் சுமார் 3000க்கும் அதிகமான படைவீரர்கள் கொண்ட ஒரு பெரும்படையை அனுப்பி வைத்தார்கள். 


இந்தியா வந்த பின் நடைபெற்ற அனைத்து போர்களிலும், போர் யுக்திகளை அமைப்பதில் அப்பாஸ் நாயகம் பெரும் பங்காற்றி #பாதுஷா_நாயகம் அவர்களுக்கு வலது கரமாக திகழ்ந்தார்கள். 10 பகுதிகளாக நடைபெற்ற போரில், 3ஆவது போரிலயே ஷஹீதாகி தன் உயிரை அல்லாஹ்விற்கு அற்பனித்தார்கள். 


அப்பாஸ் மந்திரி நாயகத்தின் ஷஹாதத், பாதுஷா நாயகத்திற்கு பெரும் இழப்பாக அமைந்தது. அப்பாஸ் நாயகம் ஷஹீதான 3ஆவது போரை நினைவூட்டவே இன்றும் #துல்கஃதா பிறை 3ல் அவர்களின் ரவ்லா ஷரீஃபில் மௌலீது ஷரீஃப் மற்றும் சிறப்பு துஆ நடைபெறுகிறது



ஏர்வாடி தர்கா ,காட்டுபள்ளியில் (துல்கஃதா பிறை-3) 27-07 2017 அன்று காலை வஜீருல் அஃலம் அமீர்_அப்பாஸ் மந்திரிஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு மௌலீது ஷரீஃப்.மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் 
மலேசியக் கிளையினர்கள் 

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு