கணக்கெடுக்கும் மந்திரிகள் தர்கா !!!


#ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளி தெற்கு நுழைவாயில் நேரே உள்ள 
தர்காவில் அடக்கமாகி இருக்கும் (#காதர்_மந்திரி, #முஹைதீன்_
மந்திரி என அழைக்கப்படும்) ஹழ்ரத் ஸையிதினா அப்துல் காதர் 
முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா 
கழன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு ஆகிய 
இருவரும் #பாதுஷா_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
 #மதீனா மாநகரின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருந்த போது 
அவர்களின் அமைச்சரவையில் தலைமை மந்திரிகளாக இருந்தவர்கள். 

பாதுஷாவின் இந்தியப் பயணத்திற்கு உடமைகள், படைகள், 
பொருட்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இறுதி வரை #ஷஹீது_நாயகம் அவர்களுடனேயே பயணித்து, அனைத்து ஏற்பாடு 
பொறுப்புகளையும் நிறைவேற்றியவர்கள். தென்தமிழக போரில், 
முதல் போரில் முதல் நாளில், அமைச்சர்களில் முதலானவராக 
ஷஹாதத் அடைந்து (இன்னுயிர் நீத்து) ஷஹீதானவர்கள் ஹழ்ரத் 
அப்துல் காதர் ஷஹீத் ரலி.. ஆவார்கள். 

முஹைத்தீன் ஷஹீத் அவர்களுக்கு போரில் வயிற்றுப் 
பகுதியில் பெரும் காயம் ஏற்பட்டு குடல் சரிந்த நிலையிலும், 
அதை பொருட்படுத்தாமல் இம்மார்க்கத்திற்காக தொடர்ந்து 
போரிட்டு பாதுஷா வின் காலடியில் ஷஹீதானார்கள். 
ஷஹீதான போருடைய நாள் கணக்கின் படி #துல்கஃதா 
பிறை-1 ல் இங்கு மௌலீது ஷரீஃப் நடைபெற வேண்டும். 
ஆனால் #துல்கஅதா பிறை-1 ல் தலை பிறை #மௌலீது 
ஷரீஃப் நடைபெறுவதால், உரூஸ் நிகழ்வில் கலந்து 
கொள்ள வருகை தரும் அதிகமான யாத்ரீகர்கள் கலந்து 
கொள்ளும் பொருட்டு துல்கஃதா பிறை-21ல் இவர்களின் 
#மவ்லீது ஷரீஃப் நடைபெறுகிறது. ஷஹீது பாதுஷாவின் 
பிரதான அமைச்சர்களான இவ்விரு ஷஹீதுமார்களுடைய 
மக்பராவில் அதிகமான செய்வினை கோளாறுகள் 
நீங்குவதால் இவர்களுடைய #மக்பரா #கணக்கெடுக்கும் 
மந்திரிகள்தர்கா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு