Posts

Showing posts from August, 2017

சித்தார் கோட்டை முகம்மதியா மேல் நிலைப்பள்ளிகளின் 71 வது சுதந்திர தின விழா !!!

Image
சித்தார் கோட்டை முகம்மதியா மேல் நிலைப்பள்ளிகளின்  71 வது சுதந்திர தின விழா 15-08-2017 அன்று  மிகச்சிறப்பாக நடைபெற்றது. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு

Image
பாதுஷா ஹழ்ரத் குத்புல் அக்தாப் சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியார் ஹழ்ரத் ஸைய்யிதா ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா (சையத் அலி ஃபாத்திமா அம்மா) அவர்களின் சகோதரர், பாதுஷா ஷஹீத் நாயகம் அவர்களின் மைத்துனர் ஹழ்ரத்_ஸையிதினா_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.  மதீனத்து அரசாட்சியை ஷஹீத் நாயகம் அவர்கள் துறந்து இந்திய பயணம் புறப்பட ஆயத்தமான போது, பாதுஷா நாயகம் அவர்களின் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகளுக்கு காப்பாளராக இருந்து பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன், போருக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறுப்பேற்று நிறைவேற்றியவர் அவர்களின் மைத்துனரான #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள்.  ஹழ்ரத் #அபூதாஹிர்_மதினி_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தாய்மாமாவான அவர்கள், அனைத்து நிலைகளிளும் துணை நின்றவர்கள் #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். போர் யுக்திகளை அமைப்பதில் முக்கிய தளபதியாக இருந்தார்கள். 6 போர் வரை எதிரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி அவர்களின் படைகளை மாய்த்த ஹழ்ரத் #ஜைனுல்_ஆபிதீன்

ஏர்வாடி தர்ஹா மணலின் சிறப்பு !!!

Image
ஏர்வாடி தர்ஹா மணலில் மன நிம்மதியும், நோய்  நிவாரணமும் கிடைப்பது ஏன்??.  மதினாவின் அரசராக இருந்த பாதுஷா சுல்தான்_ஸைய்யிது இப்ராஹீம் ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கனவு உத்தரவுப்படி இந்தியா வந்து, போர் செய்து, இஸ்லாமிய அரசை நிறுவி விட்ட பின் மீண்டும் மதீனா திரும்பி அங்கேயே வஃபாத் ஆக விரும்பிய போது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் கனவில் தோன்றி "மகனே இப்ராஹீமே..! மதீனத்து மண்ணில் அடக்கமாக வேண்டும் என்ற உனது அவா புரிகிறது. ஆனால் உன்னை நான் இந்திய தேசம் அனுப்பியது இஸ்லாமிய அரசாட்சியை நிறுவ மட்டும் அல்ல. தெற்காசியாவில் எனது பிரதிநிதியாக கியாமத் நாள் வரை இருந்து அம்மக்களுக்கு என் புறத்திலிருந்து ரஹ்மத்தை அருள வேண்டும். மதீனாவின் மண்ணில் அடங்கப் பெற வேண்டும் என்கிற உனது அவாவை பூர்த்தி செய்ய, மதீனாவில் இருந்து ஒரு பிடி மணலை எடுத்து, நீ அடங்க இருக்கும் ஏர்வாடியில் ஊதி கலந்து விடு. மதீனத்து மணலில் என்ன பாக்கியம் இருக்கிறதோ அதை அப்படியே ஏர்வாடியின் பூமியில் அடைந்து கொள்வாய். கவலை வேண்டாம் மகனே" என கூறிச்

ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!! 14-08-2017 அன்று #துல்கஃதா பிறை 21. #ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளியில் அடக்கமாகி உள்ள பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனத்து அமைச்சர்கள் ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு #காதர்_மந்திரி#முஹ்யித்தீன்_மந்திரி தர்கா ஷரீஃபில்,கத்மல் #குர்ஆன்கத்தம் தமாம், #மௌலீது ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது. நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

டாக்டர் அப்துல் ஹக்கீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு

Image
· ஏர்வாடி யில் #துல்கஃதா ஒரு மாத தொடர் இபாதத்துகளில் நேற்று பிறை 17, #காட்டுபள்ளியில் அடங்கப் பெற்றிருக்கும் #பாதுஷா_நாயகம் அவர்களின் மருத்துவ குழுவின் தலைவர் ஸையிதினா அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் பாதுஷா ஷஹீது ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் #மௌலீது ஷரீஃப் தினம் ஆகும். மதீனா நகரில் இருந்து பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு அனைத்து குழுக்களும் வருகை தந்ததோடு, பிரயாண வழியில் சுகவீனம் ஏற்படுபவர்களுக்காகவும், போரில் காயமடைபவர்களுக்காகவும் மருத்துவம் செய்வதற்காக மருத்துவ குழுக்களையும் அழைத்து வந்தார்கள். ஹழ்ரத் யூசுப் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் முஹம்மது டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ரூம் ஸையத் அஹ்மத் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் சாதிக் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் முஹைதீன் டாக்டர் ஷஹீத், ஆகிய முக்கிய ஆண் மருத்துவர்களும், பெண்களுக்கு மருத்துவம் செய்வதற்காக ஜெய்லானி டாக்டர், ருகைய்யா அம்மா டாக்டர் ஆகிய பெண் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் தலைவராக ஹழ்ரத் அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் ஷஹீத் தலைமை மருத்துவராக இருந்தார்கள்.  மருத்துவராக மட்டும் அல்லாமல் போரில் பங்கு கொண்ட

ஏர்வாடி நகரில் நடைபெறும் புனித கொடியேற்றும் நிகழ்வு !!!

Image
ஏர்வாடி நகரில்  நடைபெறும் இந்த புனித கொடியேற்றும்  நிகழ்வு, புனித மதினாவின் அரசராக இருந்த, ஹழ்ரத் சுல்தான் சையது இப்ராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி இஸ்லாமிய மார்கத்தை தென்னிந்தியாவில் நிலை நிறுத்த 1198ஆம் ஆண்டு தமிழகம் வந்து, மார்கத்தை ஏற்க மறுத்த அக்கால பாண்டிய மன்னர்களுடன் போரிட்டு, 10 முறை விடாமல் போர் தொடர்ந்து, அப்போரில் 18 வயதே ஆன தன் ஒரே மகன் மற்றும் முக்கிய பல அமைச்சர்களின் உயிரை அல்லாஹ்விற்காக தியாகம் செய்து, பெரும் சிரமத்தின் முடிவில் அவ்வரசர்களை வெற்றி கொண்டு தமிழகத்தின் முதல் இஸ்லாமிய அரசாட்சியை உருவாக்கி அதன் அரசராக ஷஹீது பாதுஷா நாயகம் அவர்கள் பொறுப்பேற்று, பௌத்திரமாணிக்கபட்டணம் (இன்றைய ஏர்வாடி சுற்று பகுதி) கோட்டையில் பாண்டிய மீன் கொடி இறக்கி, தீன்_கொடி ஏற்றிய 855ஆம் ஆண்டு அடையாளம் ஆகும். தென்னகத்தில் இஸ்லாமிய அரசாங்கம் நிறுவப்பட்டது நமக்கு மகிழ்வான நிகழ்வாகும். அதை நினைவூட்டவே வருடந்தோறும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை விமர்சிக்கும் முர்ததீன்களுக்கு இது கவலைக்குரிய விஷயமாகும்.

சந்தனப்பீர் !!!

Image
சந்தனப்பீர் - பெயர் காரணம்.  ஏர்வாடி ஷரீஃப் காட்டுபள்ளியில் உள்ள சந்தனப்பீர் தர்காவில் அடக்கமாகி உள்ள ஷஹீத் அவர்களின் உண்மையான பெயர் ஹழ்ரத் #ஜுல்ஃபிகார்_அலி ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு.என்பதாகும். #துருக்கி நாட்டைச் சேர்ந்த அவர்கள் துருக்கிய படைக்கு தளபதியாக பாதுஷா நாயகம் அவர்களுடன் சேர்ந்து தமிழக போரில் பங்கெடுத்து உயிர் நீத்தார்கள்.  குளிர் பிரதேசமான துருக்கியிலிருந்து வந்த அவர்கள், தமிழகத்தின் தகிக்கும் வெயிலினால் உடலில் கொப்புளங்கள் ஏற்படும் நிலையில் அதை சமாளிக்க தினமும் தம் புனித உடல் முழுவதும் சந்தனத்தை அரைத்து பூசிக் கொள்வார்கள். இதன் காரணமாகவே "சந்தனப்பீர்" என பெயர் ஏற்பட்டது. #Ervadi #Erwadi #Kattupalli #Sandappeer #Santhanapeer. நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

கணக்கெடுக்கும் மந்திரிகள் தர்கா !!!

Image
#ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளி தெற்கு நுழைவாயில்  நேரே உள்ள  தர்காவில் அடக்கமாகி இருக்கும்  (#காதர்_மந்திரி, #முஹைதீன்_ மந்திரி என அழைக்கப்படும்)  ஹழ்ரத் ஸையிதினா அப்துல் காதர்  முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா  கழன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு ஆகிய  இருவரும் #பாதுஷா_நாயகம்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  #மதீனா மாநகரின் ஆட்சிப்  பொறுப்பில் அரசராக இருந்த போது  அவர்களின் அமைச்சரவையில் தலைமை மந்திரிகளாக இருந்தவர்கள்.  பாதுஷாவின் இந்தியப்  பயணத்திற்கு உடமைகள், படைகள்,  பொருட்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இறுதி வரை #ஷஹீது_நாயகம்  அவர்களுடனேயே பயணித்து, அனைத்து ஏற்பாடு  பொறுப்புகளையும் நிறைவேற்றியவர்கள். தென்தமிழக  போரில்,  முதல் போரில் முதல் நாளில், அமைச்சர்களில்  முதலானவராக  ஷஹாதத் அடைந்து (இன்னுயிர் நீத்து)  ஷஹீதானவர்கள் ஹழ்ரத்  அப்துல் காதர் ஷஹீத் ரலி.. ஆவார்கள்.  முஹைத்தீன் ஷஹீத் அவர்களுக்கு போரில் வயிற்றுப்  பகுதியில் பெரும் காயம் ஏற்பட்டு குடல் சரிந்த நிலையிலும்,  அதை பொருட்படுத்தாமல் இம்மார்க்கத்திற்காக தொடர்ந்து  போரி

ஹழ்ரத் முர்ஸல்_இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு !!!

Image
ஹழ்ரத் முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் பாதுஷா நாயகம் அவர்களின் 10ஆவது தலைமுறை  நேரடி பேரர் ஆவார்கள். இவர்களின் மகனார் தான் ஏர்வாடி தர்காவின்  மூல முதல் #முஜாவிர் ஆன ஸையிதினா முஹம்மத் இப்ராஹீம் (என்ற) நல்ல_இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். கீழே உள்ள முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் #தர்காஹ் #ஏர்வாடி யில் இருந்து 4 கி.மீ தொலைவில் #கீழக்கரை செல்லும் ECR சாலையில் #தச்சுஊரணி என்ற இடத்தில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணியளவில் இங்கு மௌலீது ஷரீஃப் ஓதி, வெற்றிக் கொடி ஏற்றப்படும். நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India . வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

அமீர் அப்பாஸ் மந்திரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு

Image
                                                   ஸைய்யிதுல் ஹகீம் அல் ஆரிஃபு பில்லாஹ்  அஷ்ஷைகு ஏர்வாடி தர்ஹா ஷரீஃப்,காட்டுப் பள்ளியில், ஆன்மீக அரசாட்சி புரியும்  அமீர் அப்பாஸ் மந்திரி   நாயகம் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள், ரோமாபுரி  பேரரசில் பிரதான அமைச்சராக இருந்தார்கள்.  ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் கட்டளைக்கினங்க இந்திய போருக்காக மதீனாவின்  அரசாட்சியை விட்டுவிட்டு,  மார்க்க பணிக்காக புறப்பட்ட  பாதுஷா ஷஹீது நாயகம்  ரலியல்லாஹு அன்ஹு,  அது குறித்து சுற்றியுள்ள அனைத்து  இஸ்லாமிய அரசர்களுக்கும் கடிதம் அனுப்பி  கலந்து கொள்ள வேண்டினார்கள்.   ரோமாபுரி இஸ்லாமிய அரசின் மன்னராக இருந்த சுல்தான்  மஹ்மூது பாதுஷா அவர்கள் தம் சார்பாக பிரதம அமைச்சர்  அமீர் அப்பாஸ் ரலி.. அவர்கள் தலைமையில் சுமார் 3000க்கும்  அதிகமான படைவீரர்கள் கொண்ட ஒரு  பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.  இந்தியா வந்த பின் நடைபெற்ற அனைத்து போர்களிலும்,  போர் யுக்திகளை அமைப்பதில் அப்பாஸ் நாயகம் பெரும்  பங்காற்றி #பாதுஷா_நாயகம் அவர்களுக்கு வலது கரமாக  திகழ்ந்தார்கள்.

ஏர்வாடி - பெயர்க்காரணம் !!!

Image
எம்பெருமானாரின் 17ஆவது தலைமுறை திருப்பேரர்  ஹழ்ரத் ஸையித்_அஹ்மத் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களுக்கும், அன்னை ஃபாத்திமா_Bபர்கா ரலியல்லாஹு  அன்ஹா அவர்களுக்கும் மூத்த மகனாராக, எம்பெருமானார்  ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் 18ஆவது தலைமுறை பேரராக பாதுஷா ஹழ்ரத் குத்பு சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த ஊர் மதீனா மாநகரில் உள்ள ஏர்பாத் என்னும் பகுதியாகும்.  பிற்காலத்தில் தென்தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சி  பொறுப்பை ஏற்ற பாதுஷா ஷஹீது நாயகம் அவர்கள் #பௌத்திரமாணிக்கபட்டணம் என்ற இவ்வூரை மதீனாவில்  தாம் பிறந்த ஊரின் நினைவாக "ஏர்பாத்" என்று பெயரிட்டார்கள்.  அதுவே தமிழில் மறுவி இன்றளவும் ஏர்வாடி என்ற  சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India . வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

மஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 51வது நினைவு நாள் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
                                          முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!!                                                  இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம்  மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்  அவர்களின் 51ம் ஆண்டு நினைவு நாள் விழா  18.7.2017 அன்று பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை,  முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம்,  வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள்  முன்னிலையில் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு  மஜ்லிஸும் அதனை தொடர்ந்து யாஸீன்  ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது. இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை ,  அழகன் குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார் கோட்டை,  உச்சிப்புளி, இராமநாத புரம், மற்றும் பல்வேறு  ஊர்களிலிருந்தும் மகான் பாபாவின் நேசர்கள்  ஆயிரக்கணக்கானோர் கலந்து  கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  மகான்பாபாவின் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள். வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு