தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் எம்.ஓ . அப்துல் காதர் ஹள்ரத் மறைவு !!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும், ஈரோடு தாவூதிய்யா அரபுக் கல்லூரி பேராசிரியருமான, ஈரோடு பழக்காரத்தெரு ஜன்னத்துல் பாகியாத் மஸ்ஜித் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவீ அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் எம்.ஓ. அப்துல் காதிர் தாவூதி ஹழ்ரத் அவர்கள், (06.12.2013) வெள்ளிக்கிழ்மை காலை ஈரோட்டில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா தொழுகை ,இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஈரோடு , பெரிய அக்ரஹாரம் , தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெறுகிறது . நாடறிந்த மார்க்க மாமேதையாகவும்,அற்புதமான சொல்லாற்றல் மிக்க அறிஞராகவும்,மார்க்கப் பணிகளில் மிகப்பெரும் சேவையாற்றியவராகவும் திகழ்ந்த இந்த உலமாப் பெருந்தகையின் சொந்த ஊர் மேலப்பாளையம்.இவர்கள் 12 வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து ஹிப்ழு பட்டம் பெற்றவர்கள்