அறியவேண்டிய அரஃபா நாள் !!!





عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال : 
«أفضلُ الأيام يومُ عرفة

நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும். 
(நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் )
இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும்.

سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ 
« صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة »
அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425)

அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765)
அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766)
இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான் அல்லாஹ் இஸ்லாத்தை முழுமைப் படுத்தி அவனது அருட்கொடையை சம்பூரணப் படுத்தினான்.

عن عُمَر بن الخطَّابِ رضي الله عنه أنَّ رَجُلاً من اليهودِ قال له : يا أميرَ المؤمِنينَ آيةٌ في كتابكم تقرؤونها ، لو علينا مَعْشَرَ يَهُودٍ نَزَلَتْ لاتَّخَذْنَا ذلِكَ اليومَ عِيداً ، قال : أيُّ آيةٍ ؟ قال : ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الأِسْلاَمَ دِيناً ( قال عُمَرُ : قَدْ عرفْنَا ذلك اليوم والمكانَ الذي أنْزِلَتْ فيه على النبي ( صلى الله عليه وسلم ) وهو قائِمٌ بِعَرَفَةَ يوم جمعة

ஒரு யூதன் கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதை நீங்கள் ஓதவும் செய்கிறீர்கள். அது மட்டும் எங்கள் யூத சமூகத்திற்கு இறங்கி இருந்தால் அந்த நாளைப் பெருநாளாகக் கொண்டாடி இருப்போம்'' என்று கூறினார். அது எந்த வசனம் என்று கலீபா கேட்க, அதற்கு அவர், ''இன்றையதினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து எனது அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம் உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக்கி திருப்தியடைந்தோம். (அல்குர்ஆன் 5:3) என்ற வசனத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது கலீபா உமர் ரலி அவர்கள் அந்த வசனம் இறங்கிய நாளும் வேளையும் இடமும் கூட எங்களுக்குத் தெரியுமே. வெள்ளிக்கிழமை அரபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் அவ்வசனம் இறங்கியது.'' அதாவது அது இறங்கிய தினத்தைப் பெருநாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அது இறங்கியதே பெருநாள் தினத்தில்தான் என பதிலளித்தார்கள். (புஹாரி:45)
அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு அதுதான் பெருநாள்.

عن عقبة بن عامر الجهني أن رسول الله - صلى الله عليه وسلم - قال إن يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام فهي أيام أكل وشرب

'' அரஃபா நாள், குர்பானி தினம், தஷ்ரீக் உடைய நாட்களான துல்ஹஜ் 11,12,13 ஆகிய தினங்கள் இஸ்லாமியர்களுக்கு பெருநாள் தினங்களாகும் அவை உண்ணும் பருகும் நாளாகும்'' (நபிமொழி-ஸஹிஹ் நஸயீ)
அரஃபா நாள் ஃபஜ்ரிலிருந்து-விடியற்காலை தொழுகையிலிருந்து தொடங்கி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அதாவது பிறை 13 அஸர் வரை கடமையான தொழுகையை நிறைவேற்றிய பிறகு தக்பீர்-இறைவனின் வல்லமையைக் கூறும் உச்சாடனங்களை- சொல்லவேண்டும்
அரபா தினம் அதைக்கொண்டு அல்லாஹ் அவனது மறையில் சத்தியம் செய்து சிறப்பித்த நாளாகும்
வாக்களிக்கப்பட்ட நாளின் மீதும் சாட்சியின் மீதும் சாட்சி சொல்லவேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!'' (அல்குர்ஆன் 82: 2,3)

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ ، وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ وَالْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ ».

இந்த வசனத்தில் வரும் முதலாவது நாள் மறுமை நாள். இரண்டாவது கூறப்பட்டது வெள்ளிக் கிழமை மூன்றாவது சத்தியம் செய்து கூறப்பட்ட நாள் அரபா நாளாகும். (நபிமொழி- ஸஹிஹ் திர்மிதி)
அல்லாஹ் ஆதமுடைய சந்ததியினரிடம் வாக்குறுதி வாங்கிய நாள் அரபா தினமாகும்.

عن بن عباس عن النبي - صلى الله عليه وسلم - قال أخذ الله تبارك وتعالى الميثاق من ظهر آدم بنعمان يعني عرفة فأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر ثم كلمهم فتلا قال : ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين.. إلى آخر الآية .

''அல்லாஹ் ஆதமுடைய முதுகந்தண்டிலிருந்து அவன் படைக்கப் போகிற எல்லா சந்ததிகளை வெளியாக்கி அணுக்களைப் போன்று அவர்களை தனக்கு முன் பரப்பி அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது அரபாவில் தான் அப்போது அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து அவர்களை நோக்கி உரையாடினான் நான் உங்கள் இறைவனாக இல்லையா? என்று அவன் கேட்டதற்கு ஏன் இல்லை.. நீதான் எங்கள் இறைவன் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் நபியே நீங்கள் அவர்களுக்கு இதை ஞாபகமூட்டுங்கள் ஏனென்றால் இதனை மறந்துவிட்டு பாராமுகமாகி இருந்தோம் என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும், அல்லது பொய்யான தெய்வங்களை இனையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள்.ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக எங்களை நீ அழித்துவிடலாமா? என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே நீங்கள் கூறுங்கள் (அல்குர்ஆன் 7:172) விளக்கவுரை: நபிமொழி-அஹ்மது:2455, நஸயி: 11127)
பாவங்களை மன்னித்து நரக விடுதலை அளிக்கும் நாள் அரஃபாவில் தங்கியிருப்பவர்களைக் கொண்டு அல்லாஹ் பெருமைப் படும் நாள்.

عن عائشة أن رسول الله - صلى الله عليه وسلم - قال ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بهم الملائكة ويقول ما أراد هؤلاء 

''அரஃபா நாளைவிட அல்லாஹ் நரகவிடுதலை அளிக்கும் நாள் வேறு இல்லை.  மேலும் அவன் நெருங்கி பிரசன்னமாகிறான். பின்னர் அவர்களைக் கொண்டு வானவர்களிடம் பெருமைப்படுகிறான்.இவர்கள் என்ன வேண்டுகிறார்கள் என்று கேட்கிறான். (சந்தோஷமாக.) நபிமொழி- முஸ்லிம் 1348

எல்லாவற்றுக்கும் மேலாக ''ஹஜ்ஜே அரஃபாவில் தங்குவதுதான்''
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

என்றும் தங்களன்புள்ள.




மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு