பாவம் போக்கும் புனிதம் நிறைந்த பராஅத் இரவு

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாஸின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,திக்ரு மஜ்லிஸ்களும்,தஸ்பீஹ் தொழுகைகளும்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான மேலப்பாளையம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ S.S.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹழரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ M.நாஸீர் அலி ஆலிம் உமரி M.A.ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதுபோன்று பினாங்கு மாநிலம்,மற்றும் மலேசியாவில் உள்ள இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட அதிகமான இடங்களிலும்,உலகம் முழுவதிலும் அதிகமான இடங்களில் புனிதம் நிறைந்த பராஅத் இரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.உலகம் முழுவதும் இச்சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமானோர் கலந்துகொண்டு கப்ரு ஜியாரத் செய்தும்,நோன்புகள் வைத்தும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள்.

ஜூலை 5--ஆம் தேதி இரவு ஷபே பராஅத் என தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பு
தமிழக அரசின் தலைமை காஜி மௌலானா மௌலவி முஃப்தி காஜி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அல் --அஷ்ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளாவது, ஹிஜ்ரி 1433- ரஜப் மாதம் 29-ஆம் தேதி புதன் கிழமை மாலை ஷஃபான் மாத பிறை தென்படவில்லை, ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கிலம் மாதம் 22-06-2012- அன்று ஷஃபான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது.ஆகவே ஷபே பராஅத் வரும் 5-07-2012-வியாழக்கிழமை-வெள்ளிக்கிழமை மத்தியிலுள்ள இரவு ஆகும் ,இவ்வாறு தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளார்கள்

வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு