Posts

வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா!!

Image
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு மௌலிது ஷரீஃப், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில்  ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள்   சிறப்பாக ஓதப்பட்டு, (23-02-2013) சனிக்கிழமை காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர்  மஸ்ஜிதுர் ரய்யான்  ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள்  தலைமையில், மதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு ,  சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. வாழும்ஊரில் (வாழூரில்) பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப்,ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று தமிழக முழுவதும் ,  மலேசியா , இலங்கை ,  மற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில்  பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப்,  ஹஜ்ரத் முஹ்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு