Posts

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ  مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ  (அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் -17-1 ) மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனால்

புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா !! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ்  இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 05--06-2013  புதன்  மாலை    -- வியாழன் இரவு   ( ரஜப்  பிறை 27-- 1434 ) அன்று மிகச் சிறப்பாக  நடைபெற உள்ளது.என்பதை,  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல்  இஷாத் தொழுகைக்குப் பின்  சிறப்பு பயான் -- திக்ர் மஜ்லிஸ் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா, அவர்களது  சீரிய தலைமையில் நடைபெறும்.இது போன்று மலேசியாவில் உள்ள நூற்றுக் கணக்கான மதரஸாக்களிலும்,மற்றும் உலகம் முழுவதும் அனைத்து பள்ளி வாசல்களிலும், புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர்  மஜ்லிஸ் நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்த

தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு துவக்க விழா !!!

Image
அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு  துவக்க விழா ( 01.06.2013 ) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜமால் முஹம்மது கல்லூரி அருகிலுள்ள, வி.எஸ். எம்.மஹாலில் நடைபெறவுள்ளது. மௌலானா ஹாபிழ் யூசுப் அலி கிராஅத் ஓதுகிறார். தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பு அமைப்பாளர் எம். முஹம்மது சிக்கந்தர் தலைமை தாங்குகிறார்.திருச்சி டவுண் காஜி மௌலானா  ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ ஆலிம், ஜமாஅத்துல் உலமாப் பொதுச் செயலாளர் திருச்சி  மௌலானா  எஸ்.எம். முஹம்மது மீரான் பாக்கவி, திருச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.முஹம்மது அன்சார் கும்பகோணம் எம்.ஏ. முஹம்மது ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் துணைத் தலைவர் மௌலானா ரூஹுல் ஹக், மவ்லானா உமர்ஃபாரூக், முஹம்மது ரபிக் (வேலூர்), எம். முஹம்மது பஷீர் (சென்னை), எம்.எஸ்.ஏ.ஷாஜகான் (இராமநாதபுரம்), எம்.ஏ. இனாயதுல்லா (கோவை),டி.நஜ்முதீன் (மதுரை), எம்.ஏ.ஹாரூன் ரஷீத் (சேலம்), ஹாஜிகே. செய்யது அப்பாஸ், (திருநெல்வேலி ),முஹம்மது சாதிக்,(மாயவரம்) எம்.எஸ். முஹம்மது யூனுஸ் (கடலூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு