Posts

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

Image
இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம் وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3) 1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3) இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி) படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும் ويذكروا اسم الله في أيام معلو

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!

Image
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் சென்று மார்க்க கல்வி பயின்றார்கள். பின்னர் வேலூர் மதரஸா  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில் '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன்  ஒரு கல்விக்கூடத்தை  நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர். '' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் தி

இஸ்லாமிய மார்க்க உண்மையான விளக்கம் !!!

Image
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இடம் ;- முகமதியர் தெரு ( கோரிப்பாளையம் ) தேதி ;- 15.09,2013 ( ஞாயிற்றுக்கிழமை ) நேரம் ;-- மாலை 5.30 மணிமுதல் 9.30 மணி வரை கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் நாளை 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை சரியாக 5.30 மணிமுதல் 9.30 மணி வரை,சுன்னத் வல் ஜமாஅத் மதுரை மாவட்ட கோரிப்பாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சியும்,ஷரீஅத் கேள்வி -- பதில் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால், இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம் தங்கள் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான சிறப்பான பதிலை தருவதற்கு சிறப்பு அழைப்பாளர் ; மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள் ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) தலைமை ;- மௌலானா, அல்ஹாஜ்,மின்னல்  முஸ்தபா நூரி ஹஜ்ரத் அவர்கள்.           ( மாநில துணைச் செயலாளர்,ஐக்கிய சமாதானப்பேரவை ) கிராஅ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு