Posts

பிரபல தொழிலதிபரும்,கல்வியாளரும் சிறந்தமனிதாபிமானியுமான,அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னையில் மறைவு !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கல்வியாளரும் சிறந்தமனிதாபிமானியுமான, அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள்   (07 -01- 2015) அன்று சென்னையில் உள்ள அவரது   நுங்கம்பாக்கம் இல்லத்தில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை  அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான்  அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற பொது சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து  தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில்  நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,  உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும்  நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும்  அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்    பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்  அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு