Posts

சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-04-2016 நேற்று  சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் ஜன்னத்துல் ஃபிர்தௌஸில், அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.. சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃபை, ஒவ்வொரு வருடமும் சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ்  மர்ஹூம் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள்தான் நடத்துவார்கள். நேற்று அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் ஓதி,மறைந்த  சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ் மர்ஹூம்  சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்களுக்கு துஆச்செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் மறைவு !!!

Image
பேரன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டை,சமுதாய ஒளிவிளக்கு வள்ளல்  அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் 12-04-2016 அன்று  மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை  அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  13-04-2016 புதன் கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு   பெரிய பள்ளிவாசல்  கப்ருஸ்தானில்   நடைபெற்றது. வள்ளல் அவர்களைப் பற்றி சில சென்ற மாதம் 18-03-2016 அன்று சித்தார் கோட்டையில்  மீலாதுப் பெருவிழாவை வள்ளல் அவர்கள் நடத்தி வைத்தார்கள். மறைந்த வள்ளல் அவர்கள்,சித்தார் கோட்டையின்  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தூணாக வாழ்ந்தவர்கள். யா அல்லாஹ் இவர்களை போல நல்ல மனிதர்கள் பலரை, சித்தார் கோட்டைக்கு வாரி வழங்குவாயாக ஆமீன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய  வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,  உறவினர், மற்

குத்புல் ஹிந் ஹழ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்  இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும், நடைபெற்று வரும் குத்புல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா  முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு  அன்ஹு  அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17  -04-2016 ஞாயிற்றுக்கிழமை   மாலை  ரஜப் பிறை 10-- 1437  அன்று மிக விமர்சையாக  நடைபெற  உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின்  மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து,  யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,மௌலானா  மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது  ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா , மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன்   ஹழ்ரத் ,நிஜாமுதீன்  ஹழ்ரத் ஆகியோரின்,சீரிய தலைமையில்  நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில்  அனைவரும் தவறாது க

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு