Posts

மர்ஹூம் மௌலானா கிளியூர் ஹழரத் அவர்கள் !!!

Image
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! மர்ஹூம் மௌலானா கிளியூர் ஹழரத் அவர்கள்  இராமநாதபுரம் மாவட்டம்,கிளியூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள்.இவர்களின் இயற்பெயர் மெளலானா  செய்யது ஆலிம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம்  மாவட்டம் வாழூர் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவில்,  பல ஆண்டுகள் பணிசெய்தார்கள்.ஏராளமான  நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கினார்கள். எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாகவும்,தமாசாகவும்  பழகுவார்கள். இவர்கள் வாழூருக்கு கிடைத்த பொக்கிஷங்களில், இவர்களும் ஒருவர்.அல்லாஹ் இவர்களுடைய தீன் பணியையும்,நல்லறங்களையும் ஏற்றுக்கொண்டு, அல்லாஹ் நாளை மறுமையில் உயர் பதவிகளை  வழங்குவானாக,என்று இன்றைய நாளில் அனைவரும்  துஆச் செய்வோமாக ஆமீன்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி நக்ஷ்பந்தி அவர்கள் மறைவு !!!

Image
பிரபல உலக குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி  நக்ஷ்பந்தி  அவர்கள்  04 -06-2016 அன்று தாருல் ஃபனாவை விட்டும்  தாருல் பகாவை  அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி  வ இன்னா  இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய  வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,  உற்றார்,  உறவினர், மற்றும் நண்பர்கள்  அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை  தந்தருளவும், சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணைய  தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்  அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன்  கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்... வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.  அவர்கள்  

சித்தார்கோட்டை,மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் 21- வது பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
  அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1437-ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 18-  ( 26-05-2016 )  வியாழன் மாலை, வெள்ளி இரவு  7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 21- வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் ;- முன்னிலை ;- அல்ஹாஜ்  அ.முஹம்மது யூசுப் அவர்கள். (ஆயுட்கால தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள்) அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். (புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்.) ஜனாப் ஆரிப்கான் அவர்கள் (புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ் மு.ஷாகுல் ஹமீது கனி அவர்கள். (தாளாளர் முஹம்மதியா பள்ளிகள்.) மௌலானா மௌலவி அல்ஹாஜ்  சையிது முஹம்மது  புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்கள். (நிறுவனர் - சித்தாரிய்யா அரபுக் கல்லூரி) வரவேற்புரை ;- ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு