Posts

சித்தார் கோட்டையில், பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு,மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,  வலமை போல், சித்தார் கோட்டை,ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்  ஜும்ஆப் பள்ளிவாசலில், அகிலத்தின் அருட்கொடை, நம்  உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த  மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதம், பன்னிரெண்டு  தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான  மவ்லிது ஷரீஃப் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வலமை போல்,13-12-2016 அன்று காலை 10-00  மணியளவில்,  சித்தார் கோட்டை,ஜன்னத்துல்  ஃபிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளிவாசலில்,பெருமானாரின்  1491 வது மீலாதுப்  பெருவிழாவை முன்னிட்டு, மௌலிது ஷரீஃப் ஓதி, சிறப்பு துஆ மஜ்லிஸ் மிகச்சிறப்பாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான சுற்றுப் புற  உலமாப் பெருமக்களும்,சித்தார் கோட்டை மற்றும் சுற்றுப்புற  முஸ்லிம்களும் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர். வஸ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு