Posts

சித்தார் கோட்டையில்,நடைபெற்ற பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழா !!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், வலமை போல், 21-12-2016 அன்று சித்தார் கோட்டையில்,  மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெருமானாரின் 1491 வது  மீலாதுப் பெருவிழா, மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,  சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலின்,இமாம் மௌலானா  மௌலவி முஹம்மது ஆரிஃப் ஆலிம் மஸ்லஹி அவர்கள்,  கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள்.  நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,  சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலின்,தலைமை  இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ  அப்துல்  காதிர் ஆலிம் மஹ்ழரி ஹழ்ரத் அவர்கள், துவக்கவுரையாற்றினார்கள்.  நடைபெற்ற,மீலாதுப்  பெருவிழாவில்,தேவி பட்டிணம்  புஹாரியா மெட்ரிகுலேசன்  பள்ளியின் இமாம்,  மௌலானா ராஜா முஹம்மது ஆலிம்  கைரி அவர்கள், இஸ்லாமிய கீதம் பாடினார்கள். நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,  சித்தார் கோட்டை மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா  மாணவர்கள்,இஸ்லாமிய பாடல் பாடினார்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு