Posts

மஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 51வது நினைவு நாள் விழா,

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!! பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம், ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்  ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின், 51- ஆம் ஆண்டு நினைவு நாள் விழா, நாள் ( 18-07-2017 ) செவ்வாய்,பின்னேரம். புதன் இரவு 7-00 மணிக்கு தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி  செய்யப்பட்டு ஜீரணி வழங்கப்படும்.   அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில்  கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து  சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு  நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும், சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத  நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம். இப்படிக்கு. மௌலானா மௌலவி அல்ஹாஜ்  M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ. S/O

ஈத் முபாரக் !!!

Image
புனித  ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள். முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே!  சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து  வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல  அல்லாஹ்  இந்த ரமழான்  மாதத்திலே நமக்கு வழங்கினான். பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள்  தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும்,  அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே!  உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க  இருக்கின்ற,  உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு  நோன்புப் பெருநாள்  நல் வாழ்த்துக்களையும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து  தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும்

முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாமின் நினைவகம் !!!

Image
முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களின் நினைவகம்  வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி அவரது பிறந்த ஊரான  இராமேஸ்வரம் அருகிலுள்ள பேய்கரும்பில் திறப்பு விழா காண உள்ள நிலையில், இந்த நினைவகத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை பற்றிய அரிய தகவல்கள் தெரியவந்துள்ளது. பிறந்த நாள், நினைவு நாளில் மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சூரிய கதிர்கள்: நினைவகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம்அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு நாளன்று இராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவகத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அறிந்து கொள்வோமா..?  “தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று வள்ளுவப் பெருந்தகை தனது உலகப் பொதுமறையான திருக்குறளில் பதிவிட்ட உவமைக்கு எடுத்துக்காட்டாக இந்த பூவுலகில் வெகு சிலரே தோன்றியுள்ளனர். கம்சனின் அடக்குமுறை ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலையில் பிறந்த கண்ணன், பிற்காலத்தில் கீதா உபதேசம் என்னும் பகவத் கீதையின் மூலம் இந்த உலகில் தர்ம நியாயங்களை நிலைநாட்டும் வகையில் பகவத் கீதையை எடுத்துரைத

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு