Posts

மலேசியாவில் அமைந்துள்ள தென் இந்தியப் பள்ளிவாசல்கள் !!!

Image
மலேசியத் திருநாட்டில் தென் இந்திய முஸ்லிம்களுக்கு சொந்தமான,இன்னும் ஏராளமான பள்ளிவாசல்கள்,நூற்றுக்கணக்கான மதரஸாக்களும் இருக்கின்றன.

தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் !!!

Image
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக  தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்  தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 10-04-2018 அன்று அதிகாலை முதலே தமிழகத்தின்  நெற்களஞ்சியமான தஞ்சை மாநகர் உலமாகளால்  விழா கோலம் பூண்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  350க்கும் மேற்பட்ட உலமாக்கள்  இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் மூத்த உலமா பெருமக்கள் நிகழ்வில்  கலந்து பயிலரங்கை மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அல்ஹம்துலில்லாஹ்... கவனிக்க வேண்டிய சின்ன சின்ன மஸாயில்கள்  தொடங்கி இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு  உரை_தயாரிப்பது_எப்படி என்பது உட்பட  பல விஷயங்கள்அலசி தரப்பட்டது. நிகழ்வை மிகச் சிறப்பாக தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல்  உலமாசபை ஏற்பாடு செய்து இருந்தது. பயிலரங்கின் இறுதியில் மாநில தலைவர்  மற்றும் செயலாளர் அவர்களும் இன்ஷா அல்லாஹ்  வருகிற மே மாதம் 12,13 மதுரையில் நடைபெற இருக்கும் தாருல் உலமா திறப்பு விழா  மற்றும்  தேசம் காப்போம் மாநில மாநாடிற்கு  தமிழகத்தின் கடைக்கோடி உலமாவும் பங்கெடுக்

சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் !!!

Image
சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒரு நாள் மதீனாப் பள்ளியில் நுழைந்து தங்கள் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுத இடத்தில் தொழுது விட்டுத் திரும்பினார்கள்...! அங்கே ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த வெளியூர்க்காரர் ஒருவர் இவர்களிடம் வந்து, என் பணப்பையைக் கொடும்! என்று கேட்டார்! பணப்பையா? எனக்கு ஒன்றும் தெரியாதே! நான் பார்க்கவில்லையே! என்ன வி­சயம் என தெளிவாகக் கூறுங்கள் என்று கேட்டார்கள்....!! அவரோ என்ன பாசாங்கு பண்ணுகிறீர்? நான் எவ்வளவு சிரமப்பட்டு அந்த ஆயிரம் பொற்காசுகளை சேகரித்து வந்தேன்! அவற்றை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டீரே!உம்மைத்தவிர வேறுயாரும் இங்கு இல்லை. நீர்தான் அதனை எடுத்திருக்க வேண்டும் என்று அதட்டினார்.,,,, இமாம் அவர்கள் அவரின் பரிதாப நிலைகண்டு மனமிறங்கி தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று ஒருபையைக் கொடுத்து இதனை எண்ணிப்பாருங்கள்! எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள்...!! வெளியூர்க்காரர் எண்ணிப்பார்த்தார். அதில் இரண்டாயிரம் பொற்காசுகள் இருந்தன...! அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன இது? என வியப்புடன் வினவினார். பரவாயில்லை

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு