Posts

ஜமாலி எனும் பேராளுமை !!!

Image
மணம்சூழ் மல்லிப்பட்டிணத்தில் மங்கலமான நேரமதில் 03-06-1960 ல் மாண்பான தம்பதியாம் முஹம்மது மஜீத், ரஹ்மத்துல் குப்ரா (அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக!) விற்கு மைந்தராக பிறந்தவர் தமிழகம் தந்த தனியொருவர் தன்னடக்கத்தில் தன்னிகரில்லாதவர் புதிய பயணம் எனும் ஹழ்ரத் அவர்களின் மாதஇதழின்  வழியே அகீதாவை கற்றோர் ஆயிரமாயிரம். ஆதாரங்கள் அடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளால் அது நிரம்பி வளிந்தது எழுத்தெனும் ஆயுதங்களை ஏந்தியும் பேச்செனும் தற்காப்பு கலைகளை சூடியும் வஹ்ஹாபிகளுக்கு எதிரான போர்களத்தில் புகுந்து புகழாரம் பெற்றவர் இன்றும் சுன்னத் வல் ஜமாஅத்தின் தலைப்புக்களில் தேடுகையில் தனியாக இணையத்தில் வந்து குவிவது ஹழ்ரதவர்களின் பதிவுகளே அரபி பாண்டித்துவத்தின் அசுர திறமையினை ஹழ்ரத் அவர்களிடம் மண்டியிட்டு ஓதிய மாணவர்களிடம் கேட்கலாம். எவரும் தொடுவதற்கு துணியாத தலைப்புக்களான வஸீலா, இஸ்திகாஸா, மவ்லித் போன்றவற்றையும் பொதுமேடைகளில் புரியும்படி போட்டுடைத்தவர் வாதம் செய்ய வா வா என மாதம் மாதம் கத்திய வம்பர்களையும் ஆதாரங்கள் எனும் வாளால் வாலை வெட்டியவர். வாதிப்போர்களின் வாதங்களை அவர்களின் வடிவங்க

தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா !!!

Image
தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா தென் இந்தியா தமிழ்நாடு கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா مدرسة العروسية‎  மறைக்கப்பட்ட வரலாறு தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்கள் தமிழ்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதோ அதேபோன்று தான் இஸ்லாத்திற்கு வழங்கிய பங்களிப்புக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன.  போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பாரிய சமூக சமயப் புணர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனை செவ்வனே நிறைவேற்றிய அறிஞராக செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா) வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள்.  முகலாய மன்னர் அவுரங்கஸீப் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் "பத்வா ஏ ஆலம்கீரி" சட்டவாக்க நூலை தொகுக்கும் குழுவிற்கு பொறுப்பாக இருந்தார்கள். இமாம் அவர்களின் பரிந்துரைக்கு அமைய மன்னர் அவுரங்கஸீப் அவர்கள், சீதக்காதி அவர்களை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராகவும் நியமித்தார்கள்.  செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள்

இந்தியாவின் 70 வது குடியரசு தின விழா !!!

Image
70 வது குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது.  தேசியக் கொடி உயர்ந்து, அவிழ்ந்து, பூமாரி பொழிந்து பட்டொளி வீசிப் பறக்கிற போது இந்தியன் என்ற பெருமிதத்தில் எல்லா சிரமங்களையும் கடந்து நெஞ்சு புடைக்கத்தான் செய்கிறது. 1947 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றோம். மூன்றாண்டுகள் நமது தேசத்தின் அறிவாற்றலும் தியாக உணர்வும் மிக்க நேரு , அம்பேத்கர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்ற மூத்த தலைவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசணம் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 ம் தேதி. அன்றைய தினம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடியரசாக மலர்ந்தது.  இங்கிலாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சாசணங்களை முன்னோடிகளாக கொண்டு இந்திய அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது என்றாலும் உலகில் உள்ள அனைத்து அரசியல் சாசணங்களையும் விட இந்திய அரசியல் சாசணம் பெரியது. குடிமக்களுக்கு அதிக உரிமைகளை தரக் கூடியது. எந்த ஒரு குடுமபமோ அதிகார பீடமோ அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல.  இந்தியக் குடியரசு, நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை தந்துள்ளது. இந்தக் குடியரசை காப்பாற்ற மக்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை தேர்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு