ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) அவர்களின் புனித வரலாறு





                                 ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி)

                          பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

ஆத்ம ஞானப் பெரியார் மகிமை தாங்கிய மாமேதை அல் ஆரிபுபில்லாஹ்
மாதிஹுர் ரசூல் இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் அப்பா 
ஒலியுல்லாஹ்  (ரஹ்) அவர்களின்
                      
வாழ்க்கைக் குறிப்பு


பிறப்பிடம் ;  காயல் பட்டினம்
காலம்    ;  ஹிஜ்ரி 1042-ல் பிறந்து கீழக்கரையில் 
ஹிஜ்ரி 1115 ஸபர் பிறை 5- ல் வபாத்தானார்கள்.

தந்தை    ;         அல் குத்புஷ் ஷெய்கு ஸுலைமான் 
ஒலியுல்லாஹ்   (ரஹ்) அவர்கள்.
 (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்)

ஆசிரியர்  ; இமாமுல் ஹுதா, ஷம்ஸுல் மஆரிப் அல்லாமா அல்   
                   மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம்  (ரஹ்) அவர்கள்.
                   (அடக்கஸ்தலம்- கீழக்கரை பழைய 
ஜும்ஆப் பள்ளியில் உள்ளது)

சகோதரர்கள் ; 1-வது அஷ் ஷெய்கு ஷம்ஸுத்தீன் வலி (ரஹ்) அவர்கள்
                    (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்)

               2-வது அஷ் ஷெய்கு அஹ்மது வலி (ரலி) அவர்கள்
                     (அடக்கஸ்தலம்- மஞ்சக்கொல்லை,தஞ்சை மாவட்டம்)

               3-வது அஷ் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் வலி (ரஹ்) அவர்கள்
               4-வது அஷ் ஷெய்கு ஸாம் ஷிஹாபுத்தீன் வலி (ரஹ்)
               அவர்கள் (அடக்கஸ்தலம்-காயல் பட்டினம்)

               5-வது அஷ் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலி (ரஹ்) அவர்கள்.

                (அடக்கஸ்தலம்-களக்காடு,ஏர்வாடி,நெல்லை மாவட்டம்)

மஹான் அவர்கள் மாபெரும் சன் மார்க்க சட்டக்கலை ஞானியாகவும்,ஆத்ம ஞானப் பெரியாராகவும் இருந்து வாழ் நாள் முழுவதும் சத்திய இஸ்லாத்திற்காகப் பாடுபட்டார்கள்.இரு உலகத் தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது மனமுவந்து யாத்தளித்த புகழ் கவிதைகள் அநேகம்.அவற்றிலே ‘’ கஸீதாயே வித்ரிய்யா ’’ அரபு உலகமே வியக்கும் வண்ணம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. உமறுப்புலவர் அப்பா (ரஹ்) அவர்கள் சிறப்புமிகு  ‘சீறாப்புராணம்’’ இயற்றுவதற்கு உரை கொடுத்தது. மஹான் மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் (ரஹ்) 
அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்.

மஹான் அவர்களின் அடக்கஸ்தலத்தை அவர்களின் ஆருயிர்த் தோழரான மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் (முஹ்யுத்தீன்) (ரஹ்) 
அவர்கள் அழகிய மக்பராவாகக் கட்டினார்கள்.

‘’ நம்மை ஆள் உடையான்வேத நபிதிருவசனம் தீனோர்
 சம்மதித் திடப்பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர்
 இம்மையும் மறுமையும் பேறிலங்கிய ஸதக்கத்துல்லாஹ்
 செம்மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே.’’உமறுப் புலவர்---


                                       www.chittarkottaisunnathjamath.blogspot.com
 

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு