Posts

Showing posts from September, 2010

* ஹஜ்,உம்ரா,ஐியாரத் *

ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-1 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-2 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-3 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-4 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-5 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-6 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-7 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-8 ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-9

மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம்

Image
                                          பிஸ்மிஹி தஆலா                     மஸ்ஜித், மத்ரஸா,ஷரீஅத்கோர்ட், இஸ்லாமிய நூலகம் & ஆய்வு  மையம் மீட்டிங்ஹால், தங்கும் அறைகள், அனைத்தும் அமைந்த 5     அடுக்குகள் கொண்ட                        தலைமையகக் கட்டிடம்                                            கட்டிடப் பணிகள் துவங்கி வருகின்றன நிறைவு செய்திட மனமுவந்து நிதி அள்ளித் தாரீர்.     தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் ! அல்லாஹ்வின் பேரருளால் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக 1956 –ல் உலமாக்களால் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்பு தான் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையாகும். பொன்விழா காலத்தை அடைந்த நம் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு இது வரை சொந்தமான தலைமையகக் கட்டிடம் இல்லை. வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்ற இக்காலத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் சேவைகளும் செய்திகளும் நம் மக்களை விரைவாக சென்றடையவும், ஜமாஅத்துல் உலமா சபை தன் நோக்கங்களிலும், லட்சியங்களிலும் வெற்றி பெறுவதற்கும், தனது பணிகளை பரவலாக்கி மக்கள் பயன் பெறும்படி செய்வதற்கும் ஓர் தலைமையகக் கட்டிடம் கட்டு

நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை

ராமநாதபுரம் , செப் 11 . ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று உலக அமைதி , மத நல்லிணக்கம் ஏற்பட பிரார்த்தனை செய்தனர் . முஸ்லிம்கள் கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு மேற் கொண்டனர் . நேற்று முன் தினம் மாலை ஷவ்வால்   பிறை தென் பட்டதையடுத்து ரம்ஜான் ( ஈகை திரு நாள் ) கொண்டாட ராமநாதபுர மாவட்ட தமிழ்நாடு அரசு காஜியார் கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி V.V.A ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் முறையான அறிவிப்புச் செய்தார்கள் . இதையடுத்து நேற்று முன் தினம் இரவு தக்பீர் ஓதப்பட்டது . நேற்று காலை 8 முதல் 9 மணிவரை தேவிபட்டினம் , சித்தார் கோட்டை , வாழூர் ,   அத்தியூத்து , புதுவலசை , பனைக்குளம் , ஆற்றங்கரை , உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது . இதில் ஜமாஅத்தார்கள் உள்பட முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று , உலக முஸ்லிம்களிடம் சமாதானமும் , சுக வாழ்வும் , ஏற்பட ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவ

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்

Image
    பிஸ்மிஹி தஆலா உண்ணாமல் பருகாமல் உடலிச்சை கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல் ,  இடறாமல் ,   ஏற்றவழி       விலகாமல் இயல்பினிலே நன்மைகளை, இலங்க வைத்த ரமளானே நன்னாள்கள் உன்னாள்கள், நானிலத்தின்  பெருநாள்கள் நம்பிக்கை  கூட்டுகின்ற  நன்மார்க்கத்  திருநாள்கள் என்னாளும் உன் பயிற்ச்சி எமை நடத்திச் செல்வதற்கே இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை பண்பற்ற செயலில்லை;பாவமில்லை; பேதமில்லை மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள் மெய்புலனில் மனநலனில் மான்புடனே மாற்றங்கள் உய்வுற்று வாழுவதற்கே ஓரிறையின் ஓர் பரிசாய் உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே வையத்துல் வாழ்வாங்கு வாழ்கின்ற ஓர் வரத்தை வானத்தின் மீதிருந்து வழங்கி விட்டாய் நன்றிகளே இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப்பூ மணக்கும் இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம் இறைவனுக்கே தலை தாழும் என்கின்ற உள்ளுறுதி யாவருமே சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு