ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்


                   
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா  நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்  மன்பவுல் அன்வார் தாருல் ஹதீஸ் வளாகத்தில்  ஜாமிஆ முதல்வர் மௌலானா ஏ. நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமையில் 24.12.2012 காலை நடைபெற்றது  செயலாளர் ஹாஜி பி.எம். முஹமத் யஹ்யா பொருளாளர் ஹாஜி ஜபார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


காரி   முகமத் அஹமத் ஹஜ்ரத் இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்
இந்த சிறப்புக் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


*ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா  & பட்டமளிப்பு விழா
   2013 ஜூன் 22,23.ஆகிய இரண்டு நாட்கள் நடத்துவது
.
* விழாவிற்க்கு சமுதாய அரசியல் கட்சி தலைவர்களை அழைப்பது
.
* ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு மலர் வெளியிடுதல்
 .
* ஜாமிஆவின் 150 வது ஆண்டு  நினைவு வளைவு காயிதே மில்லத் சாலை ,மற்றும்
ஏரிக்கரை மெயின் ரோடு ஆகிய  இரண்டு இடங்களில் அமைப்பது.
.
* நமது ஜாமிஆவில் பட்டம் பெற்று சென்ற அணைத்து மன்பஈ  ஆலிம்களை  அழைத்து
   கண்ணியபடுத்தும் வகையில் நினைவு பரிசு வழங்குதல்.
 .
* விழா குழு  அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.
 .
விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டத்தில்  ஜாமிஆவின் பேராசிரியர்கள், உலமா பெருமக்கள், ஜாமிஆ நிர்வாககுழு  உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள் .

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு