Posts

Showing posts from April, 2015

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) ,அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ், மர்ஹூம்,நாகூர் E.M.ஹனீஃபா (ரஹ்) அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்

Image
அஜ்மீர் ராஜாவே கருணை(க்) குவாஜாவே அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா அழகான அஜ்மீரில் ஆட்சி செய்யும் ராஜா  வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் புனித தர்ஹா ஷரிஃப் பற்றிய சில தகவல்கள்

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு

Image
குராசானைச் சேர்ந்த ஸீஸ்தானில் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை பதினான்கில் அதாவது கி.பி. 28-04-1116 இல் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் காஜா ஸையிது கியாஸுத்தீன் ஹஸன், தாயாரின் பெயர் ஸையிதா மாஹினூர் என்பதாகும். ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போலவே இவர்களும் தந்தை வழியில் ஹஸனி என்றும், தாயார் வழியில் ஹுஸைனி என்றும் சொல்லப்படுகிறது. உள்ளூர் மதரஸாவில் திருக்குர்ஆன், ஹதீஸ் பாடங்களை சிறுவயதிலேயே கற்ற அவர்கள் தம் ஒன்பதாம் வயதிலேயே திருக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாபிள் ஆகிவிட்டார்கள். ஹிஜ்ரி 550 வரை புகாரா, சமர்கந்தில் தங்கிய ஹழ்ரத் அவர்கள் மௌலானா ஹுஸாமுத்தீன் ​ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுல் இஸ்லாம் ரலியல்லாஹு அன்ஹு ​போன்ற பெரியார்களிடம் திருக்குர்ஆன் வியாக்கினம், ஹதீஸ், பிக்ஹு ஆகிய மார்க்க ஞானக் கலைகளை கற்றார்கள். இதன் பின் கிவா, தூஸ் போன்ற நாகரிகமிக்க பட்டணங்களுக்கும் சென்று பெரியார்களை சந்தித்து விட்டு பக்தாதை நோக்கி பயணமானார்கள். பக்தாதை விட்டு நீங்கிய

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்ஹா ஷரீஃபில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டப்பட்டது !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா  ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்ஹா  ஷரீஃபில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டுவிழா,  17-04-2015 அன்று சிறப்பு துஆ மஜ்லிஸுடன்  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுன்னத் ஜமாஅத் முன்னோடிகளும்,கண்ணியமிகு உலமாப்  பெருமக்களும்,ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா (ரஹ்) அவர்கள்,சென்னையில் மறைவு !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   இஸ்லாத்தையும், இறை ஞானத்தையும் பாடல்களின்  மூலம் உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளத்திற்குள்  கொண்டு சென்ற, நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய  இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ்  நாகூர் E.M.ஹனீஃபா ( ரஹ் )அவர்கள், 08-04-2015 அன்று, சென்னையில்,கோட்டூர் சேரி இல்லத்தில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 09.04.2015 அன்று வியாழன் மாலை 4 மணிக்கு,நாகூர் தர்கா  ஷரீஃபில் தொழுகைவைத்து நாகூர் தர்கா ஷரீஃப்,சின்ன  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  எல்லாம் வல்ல அல்லாஹ், நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வ துடன், நாகூர் ஷரீஃபின்  தவப்புதல்வரின்  , பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,  உற்றார், உறவினர்,  ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ர

சாலை விபத்தில் பள்ள பட்டி மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களுமாக 9 பேர் ஷஹீதானார்கள் !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கொடைக்கானலுக்கு சென்று திரும்பும் வழியில்,சித்தையன்  கோட்டைக்கு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில், பள்ள பட்டி மக்தூமிய்யா அரபுக்கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களுமாக 9 பேர் 03-04-2015 அன்று  தாருல்  ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் ஷுஹதாக்களின்,  நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச்  சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து  தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், ஷுஹதாக்களின், பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,  மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள்  அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை  தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்,  ஷுஹதாக்களின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன்  கேட்டுக் கொள்கின்றோம்.

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில்,சங்கைக்குரிய, சமுதாய சங்கநாதம், மௌலானா மௌலவி அல்லாமா A.முஹம்மது ஷப்பீர் அலி பாக்கவி ஹழரத் அவர்களின் மூன்று நாள் சிறப்புத் தொடர் சொற்பொழிவு !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷாஅல்லாஹ் வரும் ரஜப் 7 .1436.(26.4.2015) அன்று நமது தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில், குத்புல் ஹிந் ஹழரத் காஜா அஜ்மீர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின் மவ்லிது ஷரீபு நடைபெறும்.அஸருக்குப்பின்  மவ்லிது, மக்ரிபுக் குப்பின் சிறப்பு துஆ, இஷாவுக்குப்பின்  மார்க்க சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும். சிறப்புப் பேருரை: நாடறிந்த நாவலர்.நற்றமிழ் வேந்தர். தாய்க் கல்லூரி வேலூர்  அல் பாகியாத்தின்,மூத்த பேராசிரியர்.மஸ்ஜித் இந்தியா  முன்னாள் தொடர் பேச்சாளர்,சங்கைக்குரிய, சமுதாய  சங்கநாதம், மௌலானா மௌலவி அல்லாமா  A.முஹம்மது ஷப்பீர்அலி பாக்கவி ஹழரத் அவர்கள். பயான் 26,27,28-4-2015;ஞாயிறு திங்கள் செவ்வாய்  ஆகிய மூன்று தினங்கள் தினமும் பயான் இஷாவுக்குப்பின்  ஒரு மணி நேரம் நடைபெறும். முதல் நாள் 26.4.2015. தலைப்பு:இறையழைப்பு பணிியில் இறை நேசர்கள். 27.4.2015 தலைப்பு;வினோத வின்னேற்றபபயணத்தின்  முன்னேற்ற அனுபவங்கள். 28.4.2015.தலைப்பு; ஆரோக்கிய ரமழா

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்  இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும், நடைபெற்று வரும் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா  முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு  அன்ஹு  அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26  -04-2015 ஞாயிற்றுக்கிழமை   மாலை  ரஜப் பிறை 07-- 1436  அன்று மிக விமர்சையாக நடைபெற  உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின்  மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து,  யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,மௌலானா  மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது  ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,சீரிய தலைமையில்  நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில்  அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள

சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மருமகன்,அல்ஹாஜ் அ.அபுல் ஹுதா அவர்கள் மறைவு !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி  அல்லாமா, மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி  அவர்களின் மருமகனும், அ.மஜ்மவுல் அஃலம், அ.செய்யிது அப்பாஸ் அலி ஆகியோரின் தந்தையுமான, அல்ஹாஜ் அ.அபுல் ஹுதா  அவர்கள்  07-04-2015 அன்று  தாருல் ஃபனாவை விட்டும்  தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜியவர்களின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,  குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றும், அவர்களின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்  துஆ செய்யும்படி  அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்... வெளியீடு ;- குடும்பத்தார்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு