வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா நடைபெற்றது !!!!


வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் 
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு 
மௌலிது ஷரீஃப்,வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி 
வாசலில் ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு 
தினங்கள் சிறப்பாக ஓதப்பட்டு,(24-01-2016) ஞாயிற்றுக் கிழமை 
காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் 
ஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் 
ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி 
ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில், 
மதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால் 
மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் 
நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற உலமாப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.









இறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு