Posts

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற புனிதம் வாய்ந்த ஸலவாத்து மஜ்லிஸ்

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்!! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சிகாம்புட்,மதரஸா மன்பவுல் உலூமில் 1மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் ''யார் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்கிறார்களோ நாளை மறுமையில் என்னோடு மிக நெருக்கமாக இருப்பார்கள்''இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரும் வகையில் 10 லட்சம் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நிகழ்ச்சி, கடந்த 23-06-2012 சனிக்கிழமை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஒரு மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நடைபெறுவது, மலேசியாவிலேயே இதுவே முதன் முறையாகும்.நிகழ்ச்சிக்கு கேரள மாநிலத்திலிருந்து இமாம் பாபுஜி தங்கள் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை தந்து மஜ்லிஸை வழிநடத்தினார்கள்.ஜொகூர் மலபார் சங்க ஏற்பாட்டில் பேருந்துகளில் மக்கள் வருகைதந்தனர்.மேலும் சிங்கப்பூர்,பினாங்கு,பேரா,மலாக்கா,கெடா,சிலாங்கூர் போன்ற மாநிலங்களிலும் இருந்தும் பலர் தனித்தனியாகவும்,கலந்துகொண்

நன்மைகளை அள்ளித் தரும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின்   நல்   அடியார்களே !  நன்மைகளை கொள்ளை கொள்ளக்கூடிய, இன்னும் பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய, சங்கையான, புனிதம்   நிறைந்த   மாதத்தை   நாம்   அடைய இருக்கிறோம். அல்ஹம்து   லில்லாஹ்.   இம்   மாதத்தில்   நாம்   அதிகமான   நல்  அமல்கள்   செய்ய  வே ண்டும் .1- இமாம்  ஜமாஅத்துடன்   ஐங்காலத்   தொழுகைகளை,   தக்பீர்   தஹ்ரீமாவுடன்   தொழ   வேண்டும் . 2-  குர்ஆன்   ஷரீஃப்  அதிகமாக   ஓத  வே ண்டும் . 3- 20- ரகஅத்துகள்   முழுமையாக   தராவீஹ்   தொழுகையை   நிறைவேற்ற   வேண்டும் . 4- இந்த   வருடத்தின்   ரமலான்   மாதத்தின்   ஃபர்ளான   நோன்பை   நாளை   பிடிக்க   நிய்யத்து   செய்கிறேன்,   என்று   நிய்யத் வைத்து   நோன்பு   வைக்க   வேண்டும் .  5-  பரக்கத்தான   ஸஹர்  உணவை   சாப்பிட்டு   நோன்பு   வைக்க   வேண்டும் . 6- அல்லாஹ்விடத்தில்   துஆச்   செய்த   பிறகே   நோன்பு   திறக்க வேண்டும் . 7- ஷரீஅத்   முறைப்படி   எந்தெந்த   பொருட்களுக்கு   ஜகாத்   கொடுக்க   வேண்டுமோ   அத்தகைய  பொருட்களை    கணக்கிட்டு   தனது   குடும்பத்தி

மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

Image
முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!!  அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்  கோலாலம்பூரில் உள்ள  P.W.T.C  அரங்கத்தில் அனைத்துலக  54- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி  (6-07-2012)   முதல் (13-07-2012)  வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்து முடிந்தது .  இதில் நாற்பத்தி நான்கு  நாடுகள் பங்கு பெற்றன . உலகத்திலேயே  தொடர்ந்து  54- வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி  மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் ,  பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் ,  மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் ,  ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா  முதலிடத்தையும் ,  இந்தோனேசியாவைச் சார்ந்த    காரீயா  இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர் . இதில் 72-காரீகளும்,27-காரீயாக்களும்,கலந்து கொண்டார்கள். இதில் பல நாடுகளின் காரீகள்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு