ரஜப் பிறை 13-முதல் ஷஅபான் பிறை 2-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்
சமுதாய பெருந்தலைவருமான,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 117--வது பிறந்த நாள் ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 8-30 மணிக்கு சென்னை வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் ஜியாரத் ஃபாத்திஹா, மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.ஜியாரத் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாபநாசத்தில் நடைபெற்ற வெள்ளம் ஜீ அவர்களின் இல்லத் திருமண விழாவில், காயல் பட்டினம் முஅஸ்கரியா மதரஸாவின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.ஹாஜா முயீனுத்தீன் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.வழுத்தூர் முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹபீபுல்லாஹ்ஷா ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்கள் முனீருல் மில்லத் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள்,தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர்,பேராசிரியர்,டாக்டர் சே.மு.மு. முஹம்மது அலி ஆகியோர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி துஆச்