மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி
முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 54- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (6-07-2012) முதல் (13-07-2012) வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்து முடிந்தது . இதில் நாற்பத்தி நான்கு நாடுகள் பங்கு பெற்றன . உலகத்திலேயே தொடர்ந்து 54- வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் , மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் , ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும் , இந்தோனேசியாவைச் சார்ந்த காரீயா இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர் . இதில் 72-காரீகளும்,27-காரீயாக்களும்,கலந்து கொண்டார்கள். இதில் பல நாடுகளின் காரீகள்