Posts

ஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்

Image
இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்ல

சித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனரின் இல்லத் திருமண விழா

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!! சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் அருளாலும், அஞ்ஞான இருள்நீக்கி மெஞ்ஞான ஒளிதந்த, அண்ணல் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நல்லாசியாலும், பனைக்குளம் மகான்  பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் ,வலிமார்கள்,நாதாக்கள்,நல்லோர்கள் துஆபரக்கத்தாலும், ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-09-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணிக்கு முபாரக்கான வேலையில், சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில், அல்ஹாஜ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகன் தீன்நிறைச்செல்வன் அல்ஹாஜ் S.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அல்ஹாஜ் M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.ஐனுல் மர்லிய்யா ஆகியோரது நிக்கா

நினைவு நாள் அழைப்பிதழ்

Image
                       முதஅவ்விதன் முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன்  வமுஸல்லிமா!!!       பனைக்குளம்            மெய்ஞான மாமேதை , மெய்நிலை கண்ட தவஞானி ,            அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ் ,  அல்லாமா , மலிகுல் உலமா ,            அஷ்ஷெய்குல் காமில் ,  குத்புஸ்ஜமான் ,  மஸீகுல் அனாம்           ஆரிபு பில்லாஹ் ,  ஷெய்குணா ,  செய்யிதி ,  மாமஹான் பாபா        செய்யி து முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்  ( ரலி )                            ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 46-  ஆம் ஆண்டு நினைவு நாள் விழா          நாள்   11-09-2012 செவ்வாய் பின்னேரம். புதன் இரவு 7-00 மணிக்கு     தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி  செய்யப்பட்டு   ஜீரணி வழங்கப்படும். அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு