ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம் மன்பவுல் அன்வார் தாருல் ஹதீஸ் வளாகத்தில் ஜாமிஆ முதல்வர் மௌலானா ஏ. நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமையில் 24.12.2012 காலை நடைபெற்றது செயலாளர் ஹாஜி பி.எம். முஹமத் யஹ்யா பொருளாளர் ஹாஜி ஜபார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரி முகமத் அஹமத் ஹஜ்ரத் இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார் இந்த சிறப்புக் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. *ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா & பட்டமளிப்பு விழா 2013 ஜூன் 22,23.ஆகிய இரண்டு நாட்கள் நடத்துவது . * விழாவிற்க்கு சமுதாய அரசியல் கட்சி தலைவர்களை அழைப்பது . * ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு மலர் வெளியிடுதல் . * ஜாமிஆவின் 150 வது ஆண்டு நினைவு வளைவு காயிதே மில்லத் சாலை ,மற்றும் ஏரிக்கரை ம