Posts

ஓட்டு யாருக்கு?

Image
மக்களாட்சி நடைபெறுகிற ஜனநாயக நாட்டில் ஆட்சியாளரை ஓட்டு போட்டு தேர்வு செய்கிற பழக்கம் இருக்கிறது. கி.பி 7 - ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனுடைய ஆட்சியைப்பற்றி ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டிலே பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்ற முறைகளைப் பற்றி சொல்லப்பட்டிருந்ததது. “குட ஓலை” மூலம் அப்பொழுது தேர்தல் நடைபெற்றிருக்கிறது. பொது இடத்திலே குடத்தை வைத்திருப்பார்கள். மக்கள் விரும்பக்கூடிய ஒருவரின் பெயரை எழுதி அதிலே போடுவார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கிற அந்த வேட்பாளர், கொலை, கொள்ளை, சூது, ஏமாற்றுதல், காமம், கற்பழிப்பு போன்ற வன்குற்றங்கள் செய்யாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடி ஆட்சி நடைபெற்ற அந்த காலத்திலேயே குடியாட்சியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற ஒரு வியப்பான செய்தியை நாம் பார்க்கிறோம். ஓட்டு போடுவது ஜனநாயக நாட்டில் அது ஒரு ஜனநாயக கடமை. அதை நாம் ஒவ்வொருவரும் செலுத்தியே ஆக வேண்டும். இன்று ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறுகின்ற இந்த ஓட்டு முறை, ஷரீஅத்தினுடை [இஸ்லாமி] ய பார்வையில் அதனுடைய அந்தஸ்து என்ன என்று நாம் ச

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு