Posts

வழிகெட்ட வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை !!!!!

Image
மலேசியா ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய நாடு,  இங்கே யாரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில்  குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.!!!  . மத்ஹப்பை பின்பற்றுவது, வெள்ளிக்கிழமை இரவு யாசீன் ஓதுவது, ஸுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது, தஹ்லீல் இன்னும் பல ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவில் இருக்கும் அத்தனை விஷயங்களிலும் மாற்றுக் கருத்து கிடையாது. . இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸலஃபி அல்லது வஹ்ஹாபிய  கொள்கை உடையோர் ஏதேனும் தவறான  பிரச்சாரம் செய்தால், ஷரியத்தில் குழப்பத்தை உண்டாக்கிய  குற்றத்திற்கு, இரண்டு வருட சிறை  அல்லது  மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும். . மலேசியா பஹாங் முஃப்தி அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். . வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மலேசியாவின் முதன்மை வானொலி மின்னல் FM நடத்திய மாபெரும் மீலாதுப் பெருவிழா !!!!

Image
முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மலேசியாவின் முதன்மை வானொலி மின்னல்  FM மாபெரும் மீலாதுப் பெருவிழாவை நடத்தியது.அல்ஹம்துலில்லாஹ். 68 வருட வானொலி ஒலிபரப்பு சேவையில்,முதல் முறையாக,மின்னல்  FM மாபெரும் மீலாதுப் பெருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது.  மீலாதுப் பெருவிழாவின் வீடியோ காட்சிகள். மீலாதுப் பெருவிழாவின் புகைப்பட காட்சிகள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Image
அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், ஹிஜ்ரி 1436 ரபீஉல் அவ்வல் பிறை 19 (09-01-2015) வெள்ளிக்கிழமை மதியம் 2-30 மணியளவில் சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா  ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா  மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழாவில் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,இன்னும் சித்தார் கோட்டையின் இமாம்கள்,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்  மாணவர்கள் இன்னும் வெளியூர்  உலமாப் பெருமக்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புனிதம்  வாய்ந்த  மௌலிது ஷரீஃப், ஓதினார்கள். இந்நிகழ்ச்சிக்கு வேதாளை ,மௌலானா மௌலவி நூரிஷா தரீக்காவின் ஹலீஃபா,அஷ்ஷைகு அப்துல் கனீ மன்பயீ  ஹஜ்ரத்  அவர்கள்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துஆச் செய்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் உள்ளூர்,மற்றும் வெளியூர் பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,இறைநேச செல்வர்களின் அன்பையும்,பெற்றுக் க

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு