Posts

ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!!! 14-08-2017 அன்று #துல்கஃதா பிறை 21. #ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளியில் அடக்கமாகி உள்ள பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனத்து அமைச்சர்கள் ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு #காதர்_மந்திரி#முஹ்யித்தீன்_மந்திரி தர்கா ஷரீஃபில்,கத்மல் #குர்ஆன்கத்தம் தமாம், #மௌலீது ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது. நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

டாக்டர் அப்துல் ஹக்கீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு

Image
· ஏர்வாடி யில் #துல்கஃதா ஒரு மாத தொடர் இபாதத்துகளில் நேற்று பிறை 17, #காட்டுபள்ளியில் அடங்கப் பெற்றிருக்கும் #பாதுஷா_நாயகம் அவர்களின் மருத்துவ குழுவின் தலைவர் ஸையிதினா அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் பாதுஷா ஷஹீது ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் #மௌலீது ஷரீஃப் தினம் ஆகும். மதீனா நகரில் இருந்து பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு அனைத்து குழுக்களும் வருகை தந்ததோடு, பிரயாண வழியில் சுகவீனம் ஏற்படுபவர்களுக்காகவும், போரில் காயமடைபவர்களுக்காகவும் மருத்துவம் செய்வதற்காக மருத்துவ குழுக்களையும் அழைத்து வந்தார்கள். ஹழ்ரத் யூசுப் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் முஹம்மது டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ரூம் ஸையத் அஹ்மத் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் சாதிக் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் முஹைதீன் டாக்டர் ஷஹீத், ஆகிய முக்கிய ஆண் மருத்துவர்களும், பெண்களுக்கு மருத்துவம் செய்வதற்காக ஜெய்லானி டாக்டர், ருகைய்யா அம்மா டாக்டர் ஆகிய பெண் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் தலைவராக ஹழ்ரத் அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் ஷஹீத் தலைமை மருத்துவராக இருந்தார்கள்.  மருத்துவராக மட்டும் அல்லாமல் போரில் பங்கு கொண்ட

ஏர்வாடி நகரில் நடைபெறும் புனித கொடியேற்றும் நிகழ்வு !!!

Image
ஏர்வாடி நகரில்  நடைபெறும் இந்த புனித கொடியேற்றும்  நிகழ்வு, புனித மதினாவின் அரசராக இருந்த, ஹழ்ரத் சுல்தான் சையது இப்ராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி இஸ்லாமிய மார்கத்தை தென்னிந்தியாவில் நிலை நிறுத்த 1198ஆம் ஆண்டு தமிழகம் வந்து, மார்கத்தை ஏற்க மறுத்த அக்கால பாண்டிய மன்னர்களுடன் போரிட்டு, 10 முறை விடாமல் போர் தொடர்ந்து, அப்போரில் 18 வயதே ஆன தன் ஒரே மகன் மற்றும் முக்கிய பல அமைச்சர்களின் உயிரை அல்லாஹ்விற்காக தியாகம் செய்து, பெரும் சிரமத்தின் முடிவில் அவ்வரசர்களை வெற்றி கொண்டு தமிழகத்தின் முதல் இஸ்லாமிய அரசாட்சியை உருவாக்கி அதன் அரசராக ஷஹீது பாதுஷா நாயகம் அவர்கள் பொறுப்பேற்று, பௌத்திரமாணிக்கபட்டணம் (இன்றைய ஏர்வாடி சுற்று பகுதி) கோட்டையில் பாண்டிய மீன் கொடி இறக்கி, தீன்_கொடி ஏற்றிய 855ஆம் ஆண்டு அடையாளம் ஆகும். தென்னகத்தில் இஸ்லாமிய அரசாங்கம் நிறுவப்பட்டது நமக்கு மகிழ்வான நிகழ்வாகும். அதை நினைவூட்டவே வருடந்தோறும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை விமர்சிக்கும் முர்ததீன்களுக்கு இது கவலைக்குரிய விஷயமாகும்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு