Posts

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆலிம்கள் & ஜமாஅத் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் !!!

Image
சமுதாயத்தின் முதுகெழும்பான ஆலிம்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் இணைந்து தத்தமது குறைநிறைகளை எடுத்துரைத்து சீர்செய்து கொள்வதற்காக கலந்தாய்வுக் கூட்டம் வருடத்திற்கு ஒருமுறை  நடத்துவது வழக்கம். அதன்படி 27.02.2018 செவ்வாய்க் கிழமை காலை மணி 10:30 க்கு மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி அஹமது அமீன் ஆலிம் தலைமையில் மண்டபம் வட்டார ஆலிம்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் (உலமா & உமாரக்கள்) கலந்தாய்வுக் கூட்டம் வேதாளை தெற்குத் தெரு முஹைதீன் பள்ளிவாசலில் நடைபெற்றது. வேதாளை ஜமாஅத் நிர்வாகிகளான ஜனாப் செய்யது அப்துல் ரகுமான், ஜனாப் முஜிபு ரகுமான், ஜனாப் சேக் அப்துல் காதர், ஜனாப் அப்பாஸ் அலி, ஜனாப் காசிம் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளியின் இமாம் மவ்லவி நிஸ்தார் கான் ஆலிம் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மவ்லவி ஜலால் இப்ராஹீம் ஆலிம் வரவேற்புரை ஆற்ற மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் துவக்க உரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி அஹமது இப்ராஹீம் ஆலிம், செயலாளர் மவ்லவி முஹம்மது ஜலாலுத்தீன் ஆலிம், பொருளாலர் மவ்லவி முஹம்மது சாஹிப் ஆலிம் , மவ்

சித்தார் கோட்டையில் நடைபெற்ற அல் குத்புல் மஜீத் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மௌலிது மஜ்லிஸ் !!!

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  27:02:2018 செவ்வாய்க்கிழமை அன்று  சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில்  மஃரிப் தொழுகைக்கு பின் அல் குத்புல் மஜீத்  நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா  நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மெளலித் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம்  பெற்ற ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு  அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

சித்தார் கோட்டையில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ் !!!

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் 19:02:2018  திங்ககிழமை அன்று சித்தார் கோட்டை ஜும்ஆப்  பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்கு பின் சங்கையான  ஸலவாத்துன் நாரிய்யா மஜ்லிஸ் மற்றும் ஊரின் முசீபத்துகள்  நீங்கவும் வரட்சிகள் நீங்கவும் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் வீரசோழன் ஜாமிஆ  கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வரும்,  ஷாதுலியா தரீக்காவின் கலிஃபாவுமான எங்களது  ஆசிரியர் பெருந்தகை மௌலானா மௌலவி  ஆஷிக்குர் ரஸூல் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத்  கிப்லா அவர்கள் வருகை தந்து சிறப்பு துஆச் செய்தார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம் பெற்ற ஏராளமான  நல்லடியார்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின்  அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு